ரஷ்யாவை சுனாமி தாக்கிய போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

False சர்வதேசம் | International

கடந்த 30 ஆம் திகதி ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பாரிய சுனாமிப் பேரலைகள் ஏற்பட்டன.

இந்நிலையில் தற்போது இந்த சுனாமி அனர்த்தத்தின் போது எடுக்கப்பட்டவை என தெரவிக்கப்பட்ட சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது.

எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் எவ்வளவு பெரிய வல்லரசாக இருந்தாலும் #இயற்கைக்கு (#இறைவன்) முன்னால் எல்லாமே ! தூசிதான் என தெரிவித்து குறித்த காணொளியானது 2025.08.01 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.


Claim – 2

Facebook | Archived Link

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல்.! பல்வேறு நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது, கடந்த 2025.07.31 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்த காணொளிகளை பலரும் சமூக ஊடகங்களில் பகிரந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)


முதலாவதாக பகிரப்பட்ட காணொளியை நாம் நன்கு அவதானித்த போது அது மூன்று வெவ்வேறு காணொளிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தமையை எம்மால் அறிய முடிந்தது.

மேலும் ரஷ்யாவில் ஏற்பட்ட சுனாமி தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் வெளியான காணொளிகள் மற்றும் செய்திகளை நாம் ஆராய்ந்த போது அவற்றில் இது போன்ற காணொளிகள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை என்பது உறுதியானது.

அத்துடன் குறித்த காணொளிகளை பார்க்கும் போது அவை எவ்வாறு எடுக்கப்பட்டன என்ற கேள்வி எழும்புவதுடன், அவற்றில் காணப்பட்ட செயற்கை தன்மை காரணமாக நாம் இந்த காணொளியின் காட்சிகளை 

AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

இதன் போது குறித்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

Claim – 2

ஹவாய் தீவில் சுனாமி தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டே இரண்டாவது காணொளி பகரிப்பட்டிருந்தது.

எனவே நாம் ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல்கள் தொடர்பில் வெளியான சரவதேச செய்திகள் தொடர்பில் ஆராய்ந்த போது, குறித்த காணொளியில் காட்டப்பட்டுள்ளவாறு இராட்சத சுனாமி அலைகள் ஹவாய் தீவுகளை தாக்கவில்லை என்பதுடன், இடைக்கிடையே அலைகளின் உயரம் 2 – 4 அடிகளுக்கு உயர்ந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகளின் மூலம் அறியமுடிந்தது.Link

எனவே நாம் இந்த காணொளியையும் AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, இந்த காணொளியும் செயற்கை நுண்ணறி தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ரஷ்யாவில் ஏற்பட்ட சுனாமியுடன் தொடர்புடைய காணொளி என பகிரப்பட்ட மேற்குறிப்பிட்ட இரண்டு காணொளிகளும் போலியானவை என்பதுடன் அவை செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டவை என்பதுவும் கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title: ரஷ்யாவை சுனாமி தாக்கிய போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

Fact Check By: Suji Shabeedharan  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *