
INTRO :
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லை மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “காஷ்மீரின் பாம்போர் அருகே இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம்! என இம் மாதம் 07 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (07.05.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த காணொளியை நன்கு அவதானித்தால், அதில் உள்ள காட்சிகள் செயற்கையாக உருவாக்கப்பட்டதை போன்று காணப்பட்டதால் நாம் அந்த காணொளியில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி அதனை ரிவ்ஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது கடந்த மாதம் 19 ஆம் திகதி Coffin Gaming என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளியினை ஒத்திருந்தமை கண்டறியப்பட்டது.
<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FCoffin404%2Fvideos%2F1340185180386876%2F%3Fref%3Dembed_video&show_text=0&width=267″ width=”267″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>
நாம் குறித்த பேஸ்புக் பக்கத்தினை ஆய்வு செய்தபோது, இது போன்று பல காணொளிகள் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது. குறித்த காணொளிகள் அனைத்து கேமிங் (Gamming) சார்ந்த காணொளியாக காணப்பட்டது.
இது தொடர்பாக சர்வதேச உண்மை சரிபார்க்கும் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் குறித்த காணொளி போலியானது என தெரிவிக்கப்பட்டிருந்தன.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. குறித்த தாக்குதலில் 26 பேர் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. Link
ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா நடத்தும் தாக்குதலுக்கு ஆபரேஷன் ‘சிந்தூர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் கடந்த 7 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Link 1
பாகிஸ்தானின் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா இந்தியா
இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, நேற்று (08.05.2025) மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த தொடங்கவே இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 போர் விமானம் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய ராணுவம் இதுவரையில் தெரிவித்திருந்தது. Link
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்ரியான் இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம் பரவும் காணொளிகள் கணனி விளையாட்டு காணொளிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம் பரவும் காணொளிகள் உண்மையா?
Fact Check By: S.G.PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team