INTRO:

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் அஷேன் சேனாரத்ன போட்டி என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):




Tiktok Link | Archived Link

சமூக வலைத்தளங்களில் “Ashen Sri Lanka AKD NPP

#npp #akd #forupage #friends #youtubers #ashen #foodtiktok #fypシ゚ #vibes #anurakumaradissanayaka @Anura Kumara Dissanayake @Ashen Senarathna @NPP TAMIL #srilanka ”

இம் மாதம் 05 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (05.10.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மாதம் 14 ஆம் திகதி (14.11.2024) நடைப்பெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 4 ஆம் திகதி முதல் வருகின்ற 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Link

அதற்கமைய பல புதிய முகங்கள் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கவுள்ள நிலையில், யூடியுப் பிரபலமான அஷேன் சேனாரத்ன தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடவுள்ளதாக பரவும் வீடியோ தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் இது தொடர்பாக அஷேன் சேனாரத்னவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு வினவியபோது, தமக்கு தேசிய மக்கள் சபையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பாக தமது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்து தான் சுயேட்சை வேட்பாளராக இம்முறை களமிறங்கவுள்ளதாக மக்களுக்கு அவர் அறியத்தந்துள்ளார்.

மேலும் குறித்த வீடியோவில் உள்ள புகைப்படம் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, இவர் 2023 ஆம் ஆண்டு நத்தாரின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் அஷேன் சேனாரத்ன போட்டி என பரவும் தகவலில் உண்மைத்தன்மை இல்லை என கண்டறியப்பட்டது.

Claim Review :   பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் அஷேன் சேனாரத்ன போட்டி
Claimed By :  Social Media User
Fact Check :  FALSE