ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு பொது பல சேனா கட்சியின் ஆதரவு என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூக வலைத்தளங்களில் “ஒட்டுமொத்த இனவாதிகளையும் ஒன்று சேர்த்த சஜித் கட்சி மியான்மார் முஸ்லிம்களின் நிலை போல் மாறப்போகும் இலங்கை முஸ்லிம்களின் நிலை சிந்தித்து வாக்களியுங்கள்” இம் மாதம் 18 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (18.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு பொதுபலசேனாவின் ஆதரவு வழங்கியதாக எவ்விதமான பிரதான ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருக்கவில்லை.
மேலும் இதனை நாம் உறுதிசெய்துக்கொள்ள பொது பல சேனா அமைப்பின் ஊடக தொடர்பாளரை நாம் தொடர்புக்கொண்டு வினவியபோது, இது முற்றிலும் போலியான தகவல் என்றும் அவர்கள் ஊடகசந்திப்பு எதுவும் மேற்கொண்டு அவ்வாறான அறிக்கையினை வெளியிடவில்லை என எமக்கு உறுதி செய்தனர்.
நாம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக தொடர்பாளரை தொடர்புக்கொண்டு வினவியபோது, இது முற்றிலும் போலியான தகவல் என உறுதிசெய்தார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சஜித் பிரேமதாசவிற்கு பொதுபலசேனா கட்சியின் ஆதரவு என பரவும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.