அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு தொடர்பாக புதிய அரசாங்கத்தினால் அறிவிப்பு என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூக வலைத்தளங்களில் “அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு” கடந்த மாதம் 25 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (25.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
புதிய ஜனாதிபதி பதிவியேற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் வெளியான அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு ஊடக அறிக்கையினை பதிவேற்றம் செய்து புதிதாக அமைந்துள்ள அரசாங்கத்தினால் குறித்த சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக சிலர் பகிர்ந்து வருகின்றமை காணக்கிடைத்தது.
இது குறித்து எமது குழு ஆய்வினை மேற்கொண்டு அரச ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து சம்பள உயர்வு தொடர்பாக புதிய அரசாங்கத்தின் கீழ் ஊடக அறிவிப்பு எது சரி வெளியிடப்பட்டுள்ளதா என நாம் பிரதான ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான எவ்விதமான அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.
நாம் இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவினை தொடர்புக்கொண்டு வினவியபோது, இது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிகாலத்தில் தபால் தேர்தல் வாக்குகளை முன்வைத்து வெளியிடப்பட்ட அறிக்கை என எமக்கு தெரிவித்தனர்.
மேலும், இந்த அரசாங்கத்தின் இதுபோன்ற எவ்விதமான அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை எனவும் எமக்கு உறுதி செய்தனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டமைக்கான செய்திகளும் எமது ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்றது. News Link | News Link 2
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு தொடர்பாக புதிய அரசாங்கத்தினால் அறிவிப்பு என பரவும் தகவலில் உண்மைத்தன்மை இல்லை என கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.