தபால் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீட்டின் மூலம் இந்நாட்களில் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை விநியோகிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு என்பது வாக்களிக்க எமக்கு விடுக்கப்படும் அழைப்பாகும். எவ்வாறாயினும், இந்த வாக்குச்சீட்டு உங்களுக்குக் கிடைத்தாலும் கிடைக்கப் பெறாவிட்டாலும், வாக்களிப்பதில் அது பாதிப்பை ஏற்படுத்தாது என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். ஒவ்வொரு வாக்காளருக்கும் இந்த வாக்குச்சீட்டு கிடைக்க பெறும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீங்கள் வாக்களிக்க ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி உங்களுக்குத் தெரியுமானால், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், உங்களுக்கு வாக்களிக்க முடியும். உத்தியோகபூர்வ வாக்கு சீட்டு கிடைக்கப்பெறவிட்டாலும் தமது அடையாளத்தை நிரூபிக்க முடிந்தால் வாக்களிக்க முடியும் என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.