
Daraz நிறுவனத்திற்கு ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது.
எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
Daraz நிறுவனத்தினால் ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு இடம்பெறுவாதாக தெரிவித்தும் அதற்கு பேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வந்தது.
குறித்த பதிவில் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் எனவும் 25 நிமிடங்களில் வேலை செய்தால் 20,000 இலங்கை ரூபா வழங்கப்படும் எனவும் நீங்கள் எவ்வளவு நேரம் வேலை செய்கின்றீர்களோ அவ்வளவு அதிகமாக சம்பாதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.01.03 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த உண்மை அறியாத பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
மேலும் Daraz நிறுவனத்தினால் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்ட மேலுமொரு பதிவு பின்வருமாறு
Fact Check (உண்மை அறிவோம்)
மேலும் நாம“ இது தொடர்பில் Daraz உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஆராய்ந்த போது Daraz நிறுவனத்தினால் ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு இடம்பெறுவது தொடர்பில் எந்தவித அறிவித்தல்களும் வெளியிடப்படவில்லை என்பதனை நாம் உறுதிப்படுத்தினோம்.
அத்துடன் நாம் இது தொடர்பில் Daraz நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறு ஒன்லைன் மூலம் எந்தவித ஆட்சேர்ப்புகளும் இடம்பெறவில்லை எனவும் சமூக ஊடகங்களில் தங்களின் நிறுவனத்தின் நாமத்தை பயன்படுத்தி பகிரப்படும் தகவல்கள் போலியானது என்றும் அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர்.
மேலும் இந்த தொழில்வாய்ப்பு தொடர்பான பதிவு வெளியிடப்பட்ட Pro Gadho என்ற பேஸ்புக் பக்கத்திற்கு சென்று ஆராய்ந்த போது அதில் எந்தவிதமான நம்பத்தகுந்த தகவல்களும் பதிவிட்டிருக்கவில்லை.
அத்துடன் நாம் குறித்த பேஸ்புக் பக்கத்தில் வதிவிடம் தொடர்பில் ஆராய்ந்த போது அங்கு தென்னாபிரிக்காவில் உள்ள டியூட்ஸ்டார்ப் (Dewetsdorp) என்ற நகரம் குறிப்பிடப்பட்டிருந்ததனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
மேலும் அந்த பேஸ்புக் பக்கத்தில் தொடர்பு தகவல்கள் எதுவும் சரிவர குறிப்பிடப்பட்டிருக்கவில்லை
மேலும் இந்த தகவல்களிகன் அடிப்படையில் இது போலியாக உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கம் என்பதனை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது.
எனினும் குறித்த பதிவில் உள்ள APPLY NOW என தெரிவிக்கப்பட்டுள்ள இடத்தினை கிளிக் செய்தவுடன் அங்கு எமது தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய படிவத்தினை பூர்த்தி செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடுவதற்கே மோசடிக்காரர்களினால் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே இவ்வாறு பிரபல வர்த்தக நாமங்களை பயன்படுத்தி தொழில் பெற்றுத்தருவதாகவோ அல்லது பரிசுகள் வழங்கப்படுவதாகவோ ஏதேனும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படும் போது அது தொடர்பில் முதலில் குறித்த வர்த்தக நிறுவனங்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்திற்கோ அல்லது இணையதளத்திற்கோ சென்று அது தொடர்பான ஏதேனும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளனவா என்பதனை ஆராய வேண்டும்.
குறித்த நிறுவனங்களினால் உண்மையிலேயே அவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளப்படுவதாக இருந்தால் அவர்கள் அது தொடர்பில் அவர்களின் உத்தியோகப்பூர்வ தளங்களில் அறிவித்திருப்பார்கள். எனவே அவ்வாறான எந்தவொரு அறிவித்தல்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை எனில் அது தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுங்கள்.
Also Read: SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்!
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் Daraz நிறுவனத்தினால் ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்புகள் இடம்பெறுவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்பதுடன் Daraz நிறுவனத்தினால் ஒன்லைன் மூலமான எந்தவொறு ஆட்சேர்ப்புகளும் இடம்பெறவில்லை எனவும் Daraz நிறுவனம் எமக்கு உறுதிப்படுத்தியது.
பொதுவாக நாம் இவற்றை SCAM என்றே அழைக்கிறோம், மேலும் இதுபோன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் அவதானத்துடன் இருக்குமாறும், இதுபோன்ற போலி தகவல்களால் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:SCAM Alert: ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பில் அவதாகமாக செயற்படுங்கள்!
Fact Check By: Suji ShabeedharanResult: False
