SLIIT northern பல்கலைக்கழகத்தின் தலைவர் இந்திரகுமார் பத்மநாதன் , ஏழ்மை நிலையில் உள்ள இலங்கையின் 25000 மாணவர்களுக்கு, இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதாக, சமூக வலைதளங்களில் பரவும் செய்தியொன்றை அவதானிக்க முடிகிறது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது போலியான என்று, ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” இலங்கையில் படிக்க முடியாத ஏழை மாணவர்கள் சுமார் 25000 பேருக்கு இலவசக் கல்விகொடுப்பது மட்டுமல்லாமல் அவர்கள் படித்து முடித்தவுடன் வேலையும் வாங்கிதந்து வருகிறார்கள் நடிகை ரம்பா மற்றும் அவரது கணவர் ” என்று இம்மாதம் 4 ஆம் திகதி (04.10.2024) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது உண்மையென நினைத்து பலரும் இதனை பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
உண்மைத்தன்மை தொடர்பாக , SLIIT northen University ன் ,திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு இயக்குனர் , ஹென்றி ட்ரூமேன் பிராவோவிடம் வினவியபோது, அவர் பின்வருமாறு தெரிவித்தார். ” தற்போதைய நிலைமையில் இலங்கையில் 25000 மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவது இயலாத விடயம் இவ்வாறான செய்திகளைப் பார்க்கும் போது மக்கள் அதன் உண்மைத்தன்மையை நிகழ்காலத்தில் ஒப்பிட்டு சிந்திக்க வேண்டும். இது முற்றிலும் பொய்’’ என்று எமக்கு அவர் கருத்து தெரிவித்தார்.
இந்த விடயத்தோடு சம்பந்தப்பட்ட கட்டுரை ஒன்றை ETV Bharat tamil nadu எனும் ஊடகம், காணொளி ஒன்றுடன் பகிர்ந்தள்ளது. அதில், மேஜிக்வூட் நிறுவனத்தின் தலைவர், இந்திரன் பத்மநாதன், நோர்தன் பல்கலைக்கழகத்தின் ஆரம்பம் மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடுகிறார்.
மேலும், அரசாங்க பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகாத மாணவர்களுக்கு, உயர்கல்வி வாய்ப்பை தங்கள் நிறுவனம் வழங்கும் என்றும் தெரிவிக்கிறார். ஆனால் இலவசமான சேவைகள் வழங்குவது குறித்து எந்த தகவலும் அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்,நோர்தன் யுனிவர்சிட்டி 25000 மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குகிறது என பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team