
நேபாளத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற கடும் போராட்டங்களின் போது பொலிஸாரை போராட்டக்காரர்கள் தாக்குவதனைப் போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
அராஜகம் செய்யும் ஒவ்வொரு அரசுக்கும் இது எச்சரிக்கை மணி மக்கள் புரட்சி நேபாளம் வன்முறை… என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.09.10 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது.
நேபாளத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து Gen Z என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களினால் கடந்த வாரம் கடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தை தொடர்ந்து அந்நாட்டு பாராளுமன்றம் உள்ளிட்ட பல பொது சொத்துக்கள் போராட்டக்காரர்களின் தீக்கிரையாக்கப்பட்டன
இதன் பின்னணியில் போராட்டக்காரர்கள் பொலிஸாரை தாக்கும் இந்த காணொளி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது, நோபாளத்தில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளில் மேற்குறிப்பிட்ட காணொளி வெளியாகியிருக்கவில்லை.
எனவே நாம் அந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது. குறித்த காணொளி கடந்த 2 ஆம் திகதி X தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
அதில் இந்தோனேஷியாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டு அவர்களுக்கு வீட்டு வாடகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் மீது பொலிஸார் கனரக வாகனத்தை ஏற்றி கொன்றதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிராகவே போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.Link | BBC
இது குறித்து நாம் தொடர்ந்து ஆராய்ந்த போது சில ஊடகங்களில் x தளத்திலும் இந்த காணொளி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி இந்தோனேஷியாவின் மேடன் நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக பல செய்தி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. Ksat

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தினை Google Map உதவியுடன் ஆராய்ந்த போது, மேற்குறிப்பிட்ட காணொளியில் உள்ள இடத்தினை அதில் அறிய காணமுடிந்தது. இந்த இடத்தின் google street view ஐ கீழே காணலாம்
சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியில் காணப்படும் இடத்திற்கும் google street view இல் காணப்படும் இடத்திற்கும் இடையிலான ஒப்பீடு பின்வருமாறு

இதன் மூலம் வீதியில் தெரியும் கட்டிடங்களும் இரண்டு படங்களிலும் உள்ளன. எனவே இந்த காணொளி மேடனில் இடம்பெற்ற சம்பவம் என்பது தெளிவாகிறது.
மேலும் எமது மலையாளம் ஃபேக்ட் கிரஸண்டோ குழுவினர் இது குறித்து உண்மை கண்டறியும் ஆய்வை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்துவதாக பகிரப்படும் காணொளி தவறானது என்பதுடன் அது இந்தோனேஷியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:நேபாளத்தில் பொலிஸாரை போராட்டக்காரர்கள் தாக்கும் காணொளியின் உண்மை என்ன?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


