தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியானதா?

அரசியல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளதாக சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):


Facebook Link
| Archived Link

சமூகவலைத்தளங்களில் “ தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியானது“ என இம் மாதம் 04 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (04.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 4 ஆம் திகதி முதல் இன்று வரை இடம்பெறுகின்றது. Link

இதன்படி தபால் மூல வாக்களிப்பு, மாவட்ட செயலக அலுவலகங்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட பிரதி மற்றும் டி.ஐ.ஜி அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், விசேட அதிரடிப்படை, விசேட பொலிஸ் பிரிவுகள் மற்றும் உயரடுக்கு பாதுகாப்பு பிரிவுகளில் தபால் வாக்கு வழங்க முடியும்.

ஆனால் அவ்வாறு குறிக்கப்பட்ட தபால் வாக்குகளை எண்ணும் பணி இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எவ்விதத்திலும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு எமக்கு உறுதி செய்தது.

கடந்த முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி  தேர்தல் நடைபெற்று முடிந்த நாளன்று மாலை 5.15 மணிக்கு  தான் தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமானது. Link

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியானது என பரவும் புகைப்படங்கள் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *