
INTRO :
இணையத்தில் தொலைபேசி திருட்டு சம்பவம் தொடர்பாக வைரலாகிய தம்புள்ளை பெண் தற்கொலை என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ “Suicide பன்னிட்டாங்க இந்த உயிர் எடுக்க தான் எல்லோரும் hard work பன்னாங்க. ஆனா அந்த உயிர் போன news மட்டும் பெருசா reach ஆகல்ல.”“ என இம் மாதம் 13 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (13.07.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
தம்புளையில் பெண்ணொருவர் தனது தாயுடன் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்துக்கு சென்று தொலைபேசி ஒன்றை திருடும் சிசிடிவி வீடியோக்களும் அதனுடன் தொடர்புடைய செய்திகளும் கடந்த காலங்களில் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இது தொடர்பாக குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். Link
இதனைத் தொடர்ந்து, ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் யுவதியை விடுதலை செய்ய தம்புள்ளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது. link
இவ்வாறான நிலையில் குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவது எம்மால் அவதானிக்க கிடைத்தது. நாம் இது தொடர்பாக தம்புள்ளை பொலிஸ் நிலையத்தினை தொடர்புக்கொண்டு வினவியபோது, தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி குறித்த தகவல் முற்றாக போலியானது என எமக்கு உறுதி செய்தார்.
குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பிரதான ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கின்றதா என நாம் ஆய்வினை மேற்கொண்டபோது அவ்வாறான செய்திகள் எதுவும் பதிவாகி இல்லை என கண்டறியப்பட்டது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இணையத்தில் வைரலாகிய தம்புள்ளை பெண் தற்கொலை செய்து கொண்டார் என பரவும் தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இணையத்தில் வைரலாகிய தம்புள்ளை பெண் தற்கொலை செய்து கொண்டாரா?
Written By: S G PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team