
Subscribe to our WhatsApp Channel
INTRO :
போலியான கணக்கெடுப்பு அறிக்கைகளை வைத்து அரசியல்வாதிகளின் சொத்து மதிப்புக்கள் குறித்து பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான சமூக ஊடக பதிவுகள் பல சந்தர்ப்பங்களில் வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில் இலங்கையின் 8வது பணக்காரர் அனுரகுமார திஸாநாயக்க எனக் குறிப்பிட்டு ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ இலங்கையின் எட்டாவது பணக்காரர் அனுரகுமார திசாநாயக்க “ என இம் மாதம் 22 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (22.08.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இலங்கையின் பத்து பணக்காரர்களில் அனுரகுமார திஸாநாயக்கவும் ஒருவர் எனத் தெரிவிக்கும் வகையில் ஊடக நிறுவனங்களிலோ, நிதி நிறுவனங்களிடமிருந்தோ அல்லது நம்பகமான நிறுவனங்களிடமிருந்தோ எந்தவொரு அறிக்கையும் பிரசுரங்களும் காணப்படவில்லை இல்லை என்பது எமது தேடலில் உறுதிப்படுத்தப்பட்டது.
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள Asian World News என்ற செய்தி இணையத்தளத்தினால் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இணைய அறிக்கை இலங்கையில் உள்ள 10 பணக்காரர்களையும் அவர்களது சொத்து மதிப்புக்களையும் சுட்டிக்காட்டி இருந்தது. அந்த பத்து பேரில் முறையே மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ஆறுமுகன் தொண்டமான், விநாயகமூர்த்தி முரளிதரன், எச்.எம்.பௌசி, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அனுரகுமார திசகாயக்க, எல். எம். அதாவுல்லா, ரணில் விக்கிரமசிங்க போன்றோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
எனினும் இந்த இணைய அறிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட ஆதாரங்களோ அல்லது கணக்கீட்டு முறை குறித்தோ எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
Asianworldnews | Archived Link
நாங்களும் இது குறித்து கண்டறிய அந்த இணையதளத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை.
மேலும், 2023 இல் இலங்கையின் முதல் 10 பணக்காரர்கள் என்று குறிப்பிடப்பட்ட பதிவு காணப்பட்டதுடன் தொடர்பிலான எந்த ஒரு ஆதாரங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்த பதிவின் படி, இந்த நாட்டின் பணக்காரர்கள் முறையே தம்மிக்க பெரேரா, ஹரி ஜயவர்தன, ரஞ்சித் பேஜ், ஷெர்லி பெரேரா, செந்தில் தொண்டமான், லக்ஸ்மன் சில்வா, சுமால் பெரேரா, ரஞ்சித் பண்டிதகே, குமார் சங்கக்கார, ரவி தம்பியா ஆகியோர் அடங்குகின்றனர். இந்தக் குறிப்பில் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
எனினும் இந்த அறிக்கைகள் எதுவும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
அனுரகுமார திஸாநாயக்கவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கை
2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்படி, அரச ஊழியர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரின் பொதுத் தகவல்களையும் ஊழல் விசாரணைச் சட்டத்தின் பிரிவு 88/1 ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக் குழுவிடம் வழங்கப்படுகின்ற சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்கள் மாத்திரமே குறிப்பிடப்படும்.
இதன் காரணமாக அநுரகுமார திஸாநாயக்கவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கை தொடர்பில் நாம் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம், அதன் பிரகாரம்,
மாதாந்த சம்பளம்: ரூ. 54.285.00
சம்பள கொடுப்பனவுகள்: ரூ. 202,517.34
நிதிச் சொத்துக்கள்: வெளிப்படுத்தப்பட்ட நிலுவைகளைக் கொண்ட மூன்று வங்கிக் கணக்குகள்.
மனைவியின் மாத சம்பளம்: இல்லை
மனைவியின் நகைகள்: 01 தங்க மாலை, 02 வளையல்கள், 02 மோதிரங்கள், 02 காதணிகள்
சொந்தமான கார்கள்: 01
சொத்து: கடவத்த வெட்டஹேன பகுதியில் தற்போது தற்போது வசிக்கும் வீடு மற்றும் காணி.
இதன் அடிப்படையில் இலங்கையின் எட்டாவது பணக்காரர்கள் வரிசையில் அனுரகுமார திசாநாயக்க இருக்கின்றார் என்று வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என உறுதியாகின்றது.
மேலும், இலங்கையின் பத்து பணக்கார அரசியல்வாதிகள் குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான போதும் நாம் இது குறித்து விசாரித்தபோது, அவ்வாறான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக நாங்கள் நடத்திய முழுமையான ஆய்வு கீழே காணப்படுகின்றது.
FACT CHECK: Forbes සඟරාව ශ්රී ලංකාවේ ධනවත්ම දේශපාලඥයින් දස දෙනාගේ වත්කම් හෙළි කළාද?
இலங்கையின் பணக்காரர்களில் எட்டாவது இடத்தில் அநுரகுமார திஸாநாயக்க இருப்பதாக கூறப்படும் கருத்துக்கள் தவறானவை. அத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கான நம்பகமான ஆதாரங்களோ அல்லது அதிகாரப்பூர்வ ஆவணங்களோ இல்லை என்பது உறுதியாகின்றது.
இது தொடர்பில் எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team