உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அமைப்பு  அறிவித்ததா? 

False சர்வதேசம் | International


INTRO:  
உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அமைப்பு அறிவித்ததாக  சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.



தகவலின் விவரம் (What is the claim):

A close-up of a certificate

AI-generated content may be incorrect.

Facebook Link  | Archived Link 

சமூக வலைத்தளங்களில் “ ஐ. நா. வின் பாரம்பரிய மற்றும் தொல் பொருள் துறை அமைப்பான யுனெஸ்கோ நடத்திய ஆய்வில் நாடார் குலம் முதலிடம் பிடித்துள்ளது,

உலகில் உள்ள 3 லட்சத்துக்கும் மேலான, ஜாதி, இன,குழுக்களை ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்ததுள்ளது, முதல் 10 இடங்களில் இந்தியாவில் வேறு எந்த ஜாதியும் இடம் பெற வில்லை, நம்பிக்கை,நாணயம்,உழைப்பு, பிறருக்கு உதவுதல்,தொன்மை,கலாச்சாரம்,பண்பாடு,பாரம்பரியம்,பாசம்,வீரம்,முதலியவற்றில்,உலகுக்கு முன்னோடி என புகழாரம்”இம் மாதம் 12 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (12.03.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

நாம் முதலில் குறித்த பதிவில் இருந்த சான்றிதழினை ஆய்வு செய்தபோது, அதில் NADAR- India என எடிட் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. குறித்த பகுதியில் பேனாவினை பயன்படுத்தி எழுதியோ அல்லது கணனியினை பயன்படுத்தி குறித்த பெயர் பொறிக்கப்பட்டிருக்கவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

மேலும் இந்த சான்றிதழை யுனெஸ்கோ எப்போது, யாருக்கு அளித்தது என்று எந்த ஒரு தகவலும் இல்லை.

உண்மையில் யுனெஸ்கோ அமைப்பினால் உலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனம் தொடர்பாக ஆய்வு முடிவு ஏதும் வெளியிட்டுள்ளதா என அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தில் தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. 

இணையத்தில் பரவுகின்ற குறித்த சான்றிதழை நாம் கூகுள் ரிவஸ் இமெஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, கஜகஸ்தான் நாட்டில் அல்மாத்தி நகரில் உள்ள டூரன் பல்கலைக்கழகத்துடன் யுனெஸ்கோ மற்றும் UNHCR இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கிய சான்றிதழ் என கண்டறிய முடிந்தது.

நாம் குறித்த இரு புகைப்படங்களையும் ஆய்வு செய்தபோது, அது இரண்டும் ஒன்றுக்கு ஒன்று ஒத்துபோவதை அவதானிக்க முடிந்தது. அதில் பயன்படுத்தியுள்ள நிறுவனங்களில் இலட்சினைகள் மற்றும் அதில் பதியப்பட்டுள்ள கையொப்பங்கள் மற்றும் அதில் பயன்படுத்தியுள்ள வடிவமைப்புக்கள் அனைத்தும் ஒத்து போவது எமது ஆய்வில் உறுதியானது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அமைப்பு அறிவித்ததாக என பரவுகின்ற தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்திய தேசிய கீதம் உலகிலேயே சிறந்தது என்று யுனெஸ்கோ அறிவித்ததா?

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அமைப்பு அறிவித்ததா?

Fact Check By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *