INTRO :
உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டாதாக என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பெறுபேறுகளை வெளியிடும் பொழுது உரிய நபரின் சுட்டெண் வேறு நபர்களிடம் சென்றடைவதால், அதனைக் கொண்டு வேறு நபர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படும். அதனை கணினி முறைமையில் இருந்து அகற்றி, உரிய நபர் விண்ணப்பிப்பதற்கு மீள ஏற்பாடுகள் செய்வதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். எனவே உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். “ என இம் மாதம் 26 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (26.04.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Explainer (விளக்கமளித்தல்)
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த சனிக்கிழமை (26.04.2024) அன்று இணையத்தில் வெளியிடப்பட்டது. Link
இதனை தொடர்ந்து இணையத்தில் உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளதாக ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை எம்மால் காணக்கிடைத்தது.
கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க விலகியதோடு, குறித்த பதவிற்கு சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்னவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இல்லை என்பது உறுதியானது.
எனவே தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை போன்ற கருத்து முன்வைக்கப்பட்டதா என அறிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நாம் தொடர்புக்கொண்டு வினவியபோது, இவ்வாறு எவ்விதமான கருத்தும் தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரினால் முன்வைக்கப்படவில்லை எனவும், இது முன்னால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவராக பதவி வகித்த சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவினால் கடந்த வருடம் (2024) தெரிவித்த கருத்து என எமக்கு உறுதி செய்தனர்.
முன்னால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பதவி வகித்த சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவினால் கடந்த வருடம் பல்கலைகழகத்திற்கு விண்ணப்பிக்கும் முறை தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த கருத்தினை அவர் தெரிவித்திருந்த காணொளியும் எமது ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்றது.
சமூக வலைத்தளங்களில் பெறுபேறுகளை வெளியிடும் நபரின் தரவுகளை கொண்டு வேறு நபர் குறித்த பெறுபேறு பெற்ற நபரை போன்று விண்ணப்பிக்க முடியும் , அதனால் குறித்த பெறுபேறுகளை பெற்ற நபர் இணையத்தின் ஊடாக பல்கலைகழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கு இரண்டாவது முறை சந்தர்ப்பம் வழங்கப்படாது எனவும், அதனை நிர்வத்தி செய்து குறித்த மாணவருக்கான வாய்ப்பினை வழங்க காலம் எடுக்கும் எனவும், அவ்வாறு எதுவும் இடம்பெற்றால் குறித்த மாணவர் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அது தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை போன்று, வேறு நபர்கள் குறித்த ஆவணத்தினை பயன்படுத்தி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்து பல்கலைக்கழக அனுமதியினை பெற முடியாது என நாம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் வினவியபோது, பெறுபேறுகளை வெளியிடும் நபரின் சுட்டெண் எண் மற்றும் அடையாள அட்டை இலக்கங்களை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேறு யார் சரி முயன்று குறித்த பெறுபேறினை பெற்ற நபருக்கு விண்ணப்பிக்க முடியாதவாறு தடுக்க வாய்ப்புள்ளது எனவும், குறித்த விண்ணப்ப படிவத்தினை தொடர்ந்து பூர்த்தி செய்துக்கொள்ள தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தரவுகள் வழங்க வேண்டி வரும் எனவும் தெரிவித்தனர்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டார் என பரவும் தகவல் கடந்த வருடம் முன்னால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் தெரிவிக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டாரா ?
Fact Check By: S.G.PrabuResult: Insight


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team