
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

குறித்த பதிவில் மைத்திரி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது என தெரிவித்து பதிவொன்று இன்று (2025.11.07) பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் சமூக ஊடகங்களில் பலரும் இதனை பகிரந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.


Fact Check (உண்மை அறிவோம்)
இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் உண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரபால் சிறிசேன கைது செய்யப்பட்டிருப்பாராயின் அது குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும், எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
எனினும் இன்றைய தினம் (07) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியமை தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Link | Link | Link
மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி காலத்தில் இராஜகிரியவிலுள்ள கட்டடமொன்றை விவசாய அமைச்சிற்கு வாடகைக்கு எடுத்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ராஜகிரியவில் உள்ள ஒரு சொத்தை மையமாகக் கொண்டே இந்த விசாரணை நடத்தப்பட்டது, இது நடிகை சபீதா பெரேராவுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது, இது விவசாய அமைச்சுக்கு மாத 2.4 மில்லியன் ரூபா வாடகைக்கு குத்தகைக்கு விடப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு
மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட்டுவிட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் உண்மையை அறிய நாம் அவரின் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு வினவியிருந்தோம். இதன்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது எனவும் அவர் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
மேலும் அவரின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இன்றைய தினம் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாகவும், வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார் எனவும் அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டது.
மேலும் அவரின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற சமபவத்திற்காக அவர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாகவும் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் மைத்திரபால் சிறிசேனவின் ஊடகப்பிரிவு உறுதிபடுத்தியுள்ளது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


