
INTRO
இலங்கையில் வாய் பேச முடியாதவர்கள் வாழும் அதிச கிராமம் என்ற தலைப்பில் சமூகஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விபரம் (what is the claim)
குறித்த பதிவு, இலங்கையில் வாய் பேச முடியாதவர்கள் வாழும் அதிசய கிராமம் என தலைப்பிடப்பட்டு கடந்த 2024.08.11 ஆம் திகதி பதவிவேற்றம் செய்யப்பட்டடுள்ளது.
மேலும் இந்த தகவலின் உண்மைத் தன்மை அறியாது பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேலும் குறித்த பதிவின் உண்மை தன்மையை ஆராயும் நோக்கில் நாம் இது தொடர்பான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்தோம். எனினும் அவ்வாறான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லலை.
இருப்பினும் குறித்த காணொளியில் உள்ள தகவல்களுடன் சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
குறித்த இணையத்தளத்தை பார்வையிட Link / Link
திரப்பனே பிரதேச செயலகம்
குறித்த காணொளியில் குறிப்பிட்ட கிராமம் அநுராதபுரத்தில் உள்ள தினிப்பிட்டிகமம் எனும் கிராமம் தொடர்பில் நாம் திரப்பனே பிரதேச செயலகத்திற்கு தொடர்பு கொண்டு வினவினோம்.
இதன்போது தினிப்பிட்டிகம எனும் கிராமம் திரப்பனே பிரதேச செயலாளர் பிரிவிற்குள் இருப்பதனை அவர்கள் உறுதிப்படுத்தியதுடன். குறித்த கிராமத்தில் வாய் பேச முடியாதவர்கள் வாழ்வதனையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
தினிப்பிட்டிகம கிராம உத்தியோகத்தர்
எனினும் அது தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தினிப்பிட்டிகம கிராம உத்தியோகத்தரான கௌசல்யாவை நாம் தொடர்பு கொண்டோம்.
இதன் போது தினிப்பிட்டிகம் கிராமத்தில் மொத்தமாக 24 குடும்பங்கள் வசிப்பதாகவும், அவற்றில் 15 குடும்பங்களில் உள்ள 9 பேருக்கு மாத்திரமே வாய் பேச முடியாமலும், செவித்திறன் அற்றவர்களாகவும் இருப்பதாக அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும் குறித்த 9 பேரும் வாய் பேசமுடியால் மற்றும் செவிப்புலனற்ற இரு குறைபாடுகளையும் கொண்டவர்கள் இல்லை எனவும் அவர்களில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு குறைப்பாடுகள் இருப்பதுடன் அவர்களில் 18 வயதிற்கு குறைந்த வயதில் ஒரு பிள்ளை மாத்திரமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் குறித்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு குடிநீர் வசதி இல்லை எனவும் சிலரின் உதவியால் தற்போது ஆரோ திட்டத்தின் மூலம் நீர் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு குறித்த கிராமத்தில் உள்ள 24 குடும்பங்களில் உள்ளவர்களில் 9 பேர் மாத்திரமே குறைப்பாடுகளுடன் இருப்பதாகவும் மற்ற அனைவரும் எந்தவித குறைப்பாடுகளும் இன்றி ஆரோக்கியமாக இருப்பதாகவும் கிராம உத்தியோகத்தர் சுட்டிக்காட்டினார்.
மேலும் குறித்த கிராமத்தில் உள்ளவர்கள் வறிய சூழ்நிலையில் வாழும் அதேவேளை குறித்த 9 பேர் மாத்திரம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேற்கொள்ளவதற்காக கூலி வேலைகளுக்கு கூட செல்லும் போது சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என தெரிவித்தார்.
இதேவேளை குறித்த கிராமவாசிகள் வீட்டு வசதிகள் இன்றி சிரமப்படும் அதேவேளை அரசாங்கத்தினால் சென்ற வருடம் 4 வீடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தில் மேலும் இன்னுமொரு வீடு அமைப்பதற்கான வேலைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
தினிப்பிட்டிகம கிராமம்
அநுராதபுரத்தில் , திரப்பனே பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட இல. 553 மிவெல்லேவ கிராம சேவை பிரிவில் தினிப்பிட்டிகம கிராமம் அமைந்துள்ளது.
தினிப்பிட்டிகம என்றழைக்கப்படும் இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 24 குடும்பங்கள் வசித்து வருகின்றன, இதில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் பிறக்கும்போதே வாய் பேச முடியாத மற்றும் செவித்திறன் அற்ற விசேட தேவையுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த கிராமம் அடிப்படை வசதிகள் அற்று இருந்தாலும் தற்போது அரசாங்கத்தின் உதவிகள் கிடைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த 9 பேரும் பிறவியில் இருந்தே குறைப்பாடுகளை கொண்டவர்களாக இருந்த போதிலும் இவர்களுக்கும் பெரும்பாலும் குடும்ப மரபணு காரணமாக இவ்வாறு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 9 பேரில் 18 வயதிற்கு குறைந்த ஒரு பிள்ளை இருப்பதாகவும் அந்த பிள்ளை தற்போது இரத்மலானையில் அமைந்துள்ள கற்புலன் மற்றும் செவிப்புலன் அற்றோர்களின் பாடசாலையில் கல்விப் பயின்று வருவதாகவும். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏனைய மாணவர்கள் மில்லேவ அரச பாடசாலையில் கல்வி பயில்வதாகவும் குறிப்பிடுகின்றனர்.
கூலித்தொழில், கால்நடை வளர்ப்பு, விவசாயம் என்பன இந்த கிராமத்தில் வசிப்பவர்களின் வாழ்வாதார தொழிலாக காணப்படுகின்றது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion:முடிவு
மேற்குறிப்பிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது குறித்த காணாளியில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று குறித்த கிராமத்தில் வசிக்கும் அனைவரும் வாய் பேச முடியாமல் மற்றும் செவிப்புலனற்ற குறைப்பாடுகளை கொணடவர்கள் அல்ல எனவும் தினிப்பிட்டி கிராமத்தில் உள்ள 24 குடும்பங்களில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் மாத்திரமே வாய் பேசமுடியாமல், செவிப்புலனற்ற குறைப்பாடுகளுடன் வாழ்கின்றமையும் தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலங்கையில் வாய் பேச முடியாதவர்கள் வாழும் அதிசய கிராமம்! உண்மை என்ன?
Fact Check By: Fact Crescendo TeamResult: Misleading
