
நாட்டின் பல பகுதிகளில் தற்போது மழையுடனான காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்து பாய்வதனை காட்டும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
எல்லை நீர்வீழ்ச்சியின் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.10.06 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
எனவே இது குறித்த உண்மை அறிய, கடந்த நாட்களில் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் தொடர்பில் பிரதான ஊடகங்களில் வெளியான செய்திகளில் ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட செய்திகளையோ அல்லது மேற்குறிப்பிட்ட காணொளி தொடர்பான செய்திகளையோ காணமுடியவில்லை.
எனவே நாம் குறித்த காணொளியின் காட்சிகளை புகைப்படமா மாற்றி தேடுதலில் ஈடுபட்ட போது, கடந்த 2024 ஆம் ஆண்டு குறித்த காணொளியானது YouTube பக்கமொன்றில் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது.
ராவணா எல்ல நீர்வீழ்ச்சி என குறிப்பிடப்பட்டு குறித்த காணொளி 2024ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
எனவே 2024 ஆம் ஆண்டில் ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்தமை தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தனவா என நாம் ஆராய்ந்தோம்.
இதன்போது, எல்ல பகுதிக்கு நீங்கள் பயணிப்பதாக இருந்தால் அவதானமாக செயற்படுமாறு தெரிவித்து 2024 ஆம் ஆண்டு மே மாதம் ராவணா நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்துச் செல்லும் காணொளி Daily News பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதேபோன்று கனமழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்துச் பாய்வதாக தெரிவித்து Daily Mirror இன் இன்ஸ்டகிராம் பக்கத்திலும் கடந்த 2024 ஆம் ஆண்டு குறித்த காணொளியானது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
பிராந்திய ஊடகவியலாளர்கள்
மேலும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சி உண்மையில் பெருக்கெடுத்துச் பாய்கிறதா என்பதனை அறிவதற்காக நாம் எல்ல பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி கடந்த வருடம் ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்த போது எடுக்கப்பட்ட காணொளி என்பதனை அவர்கள் உறுதிசெய்தனர்
மேலும் கடந்த 3 தினங்களுக்கு முன்பே அந்த பகுதியில் கடும் மழை பெய்ததாகவே அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பெய்த கடும் மழைவீழ்ச்சியினால் சிறியளவிலான மண்சரிவுகளே எற்பட்டன எனவும் குறித்த காணொளியில் உள்ளவாறு ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்து பாயவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதேபோன்று கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் பெய்த மழையினால் எல்ல நீர்வீழ்ச்சி பாரியளவில் பெருக்கெடுக்காது எனவும் அவ்வாறு பெருக்கெடுக்க வேண்டுமாயின் பண்டாரவளை உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்ய வேண்டும், அதன் ஊடாக ஏற்படும் நீரோட்டத்தின் அதிகரிப்பினாலேயே அவ்வாறானளவில் நீர்வீழ்ச்சி பெருக்கெடுக்கும் என்றும் தெரிவித்னர்.
பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்
மேலும் இது தொடர்பில் நாம் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை தொடர்புகொண்டு வினவியிருந்தோம், இதன்போது கடந்த 2025.10.06 ஆம் திகதி எல்ல பகுதியில் பாரியளவில் மழை பெய்யவில்லை எனவும் சாதாரண மழை வீழ்ச்சியே காணப்பட்டதாகவும் தெரிவித்தனர். அதேபோன்று எல்ல நீர்வீழ்ச்சி பாரியளவில் பெருக்கெடுத்துச் செல்லவில்லை எனவும் சாதாரணமான நீரோட்டமே காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் கடந்த காலங்களில் போதியளவு மழை வீழ்ச்சி இல்லாதைமையினால் தற்போது பெய்த மழைக்கு எல்ல நீர்வீழ்ச்சி பாரியளவில் பெருக்கெடு எடுத்து பாயாது எனவும் தொடர் மழைவீழ்ச்சி ஏற்பட்டால் மாத்திரமே எல்ல நீர்வீழ்ச்சி இவ்வாறு பெருக்கெடுத்து பாயும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்துப் பாய்வதாக பகிரப்பட்ட காணொளியானது, கடந்த 2024 ஆம் ஆண்டு பெய்த கடும் மழைக் காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்துப் பாய்வதாக பகிரப்படும் பழைய காணொளி!!!
Fact Check By: Suji shabeedharanResult: Misleading
