INTRO :
மித்தெனிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு என ஒரு செய்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கியதன் விளைவாக ஐந்து வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று நேற்று மித்தெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விதை சிக்கியதையடுத்து மயக்கம் அடைந்த சிறுவன், உடனடியாக கட்டுவான பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும், சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. “என இம் மாதம் 08 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (08.07.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மைஅறிவோம்)
மித்தெனிய பொலிஸ் பிரிவின் பல்லே ஜூலம்பிட்டிய பகுதியில் நான்கு வயது பாலர் பள்ளி குழந்தை ஒன்று ரம்புட்டான் தொண்டை குழியில் சிக்கி உயிரிழந்ததாக முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
தனது தாயுடன் சுற்றுலா சென்று வீடு திரும்பிய குழந்தை, முற்றத்தில் ரம்புட்டான் சாப்பிட்டுக்கொண்டு சைக்கிளில் விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென குழந்தை சைக்கிளில் இருந்து மயங்கி விழுந்ததாகவும், குழந்தையின் பாட்டியும் தாயாரும் குழந்தையை கட்டுவன மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் வலஸ்முல்ல மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்துவிட்டதாகவும், மரணம் குறித்து பிரேத பரிசோதனை இன்னும் நிறைவடையவில்லை என்றும் நேற்று முன்தின (09.07.2025) செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Link 1 | Link 2
நாம் குறித்த சம்பவத்தினை உறுதிப்படுத்த மித்தெனிய பொலிஸ் நிலையத்தினை தொடர்புக்கொண்டு வினவியபோது, பல்லே, ஜூலம்பிட்டியவில் உள்ள அதுபோடா வீட்டைச் சேர்ந்த சதிரா துலன்சா என்ற குழந்தை தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கியதால் அல்ல, மாறாக மரபணு கோளாறு காரணமாக இறந்ததாக மருத்துவமனை பொலிஸாருக்குத் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
திவயின பத்திரிகையில் இந்தக் கட்டுரையை எழுதிய மித்தெனிய உள்ளூர் பத்திரிகையாளர் அமில ஜெயவர்தனாவிடமும் நாங்கள் தொடர்புக்கொண்டு வினவியபோது,குழந்தை ரம்புட்டான் விதையை விழுங்கியதால் குழந்தை இறந்ததாகக் அருகில் இருந்த குடியிருப்பாளர்கள் கூறியதாகவும், உண்மையில் அந்த நேரத்தில் குழந்தையின் கையில் ஒரு ரம்புட்டான் இருந்ததாகவும் அவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், நேற்று முன்தின (09.07.2025) மாலை குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை, குழந்தையின் குடும்பத்தினர் உட்பட பலர், ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறடித்ததால் குழந்தை இறந்ததாக நினைத்தனர்.
குழந்தை இதய நோயால் இறக்கவில்லை, மாறாக அதே போன்ற மரபணு நோயால் இறந்ததாகவும், இரு வருடங்களுக்கு முன்னர் குழந்தையின் தந்தையும் இதே போன்ற நோயால் இறந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குழந்தையின் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியால் மயக்கமடைந்த தாய், தங்காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தவர் குடும்பத்தில் இளைய குழந்தை, அவருக்கு ஒரு மூத்த சகோதரனும் சகோதரியும் உள்ளனர் என்று அவர் கூறினார்.
லங்காதீப செய்தித்தாளுக்கு முன்பு குறித்த செய்தி தொடர்பாக தான் எழுதியதாகவும், பின்னர், உண்மைகள் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, குறித்த செய்தியினை சரிசெய்து உண்மைகளை வழங்கியதாகவும் அவர் கூறினார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இந்த குழந்தை தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கியதால் இறந்ததாக வெளியான செய்தி தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:மித்தெனிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பா?
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team