ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் A330-200 விமானத்தை  புதிதாக கொள்வனவு செய்ததா?

Missing Context இலங்கை | Sri Lanka

நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பார்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கடந்த 04.06.2025 ஆம் திகதி ஏர்பஸ் A330-200 எனும் விமானம் பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்தது.

அதன் பின்னர் ஏர்பஸ் A330-200 தொடர்பில் சமூகத்தில் பெரிதும் பேசப்பட்டது. அந்தவகையி ஸ்ரீ லங்கன் விமான சேவை அந்த ஏர்பஸை புதிதாகக் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்பட்ட பல தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் சேவையில் புதிய விமானம்!

ஸ்ரீ லங்கன் விமான சேவை புதிதாகக் கொள்வனவு செய்த, 4R-ALT எனப் பதிவு செய்யப்பட்டுள்ள எயார் பஸ் A330-200 விமானம், பிரான்ஸிலிருந்து வந்த விசேட விமான பயணத்தின் பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அதன்படி, கொழும்பு துறைமுக நகரத்தின் தெற்கிலிருந்து மொறட்டுவை வரை இந்த விமானம் பறந்தமை குறிப்பிடத்தக்கது. என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.06.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்து.

மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணைந்த ஏர்பஸ் A330-200 விமானம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து ஆராய்ந்தோம்.

இதன்போது குறித்த செய்திகளில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் ஏற்கனவே காணப்பட்ட 22 விமானங்களுடன் இந்த ஏரபஸ் இணைவதன் அதன் விமானங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீடித்த குத்தகையின்  கீழ் பிரான்சில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து 8 ஆண்டுகள் குத்தகைக்கு இந்த ஏர்பஸ் A330-200 பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் தலைவர் சரத் கனேகொட தெரிவித்ததாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.  Link 

முந்தைய அரசாங்கம், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், நான்கு அகல-உடல் விமானங்களை செயல்பாட்டு குத்தகை அடிப்படையில் வாங்க அனுமதியளித்தது, இதில் ORIX Aviation நிறுவனத்திடமிருந்து இரண்டு விமானங்களை 360,000 அமெரிக்க டொலரிற்கு ஆறு ஆண்டுகளுக்கும், Aergo Capital Limited நிறுவனத்திடமிருந்து இரண்டு விமானங்களை 365,000 டொலர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கும் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது எனவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே இது குறித்து நாம் மேலும் ஆராய்ந்த போது குறித்த ஏர்பஸ் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த 05.06.2025 ஆம் திகதி பாராளுமன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது இந்த விமானத்தை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் 8 வருடங்கள் இதனை பாவித்துவிட்டு பின்னர் இந்த விமானத்தை நாம் திருப்பிகொடுப்போம் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் இந்த விமானம் இதற்முன்னர் பாவனையில் இருந்த ஒன்று என்பது உண்மை எனவும் புத்தம்புதிய விமானமொன்றை இப்போது எமக்கு கொள்வனவு செய்யமுடியாது எனவும் அவ்வாறு கொள்வனவு செய்ய வேண்டுமாயின் அதற்காக 1.3 மில்லியன் செலவாகும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அத்துடன்  இந்த விமானம் இதற்கு முன்னர் பாவனையில் இருந்திருந்தாலும் தற்போது அதன் பாவனை நிலைமைகள் புதிதாகவே உள்ளது அவை தொடர்பில் நன்கு பரிசோதித்த பின்னரே நாம் இந்த விமானத்தை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளோம் எனவும் அமைச்சர் இதன் போது குறிப்பிடார்.

ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ்

மேலும் நாம் இந்த ஏர்பஸ் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தொடர்பு கொண்ட போது, எதிர்வரும் திங்கட் கிழமை (2025.06.09) தம்மை தொடர்புகொள்ளுமாறும் அப்போது இது குறித்த முழுமையான விபரங்களை தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்கள்.

எனவே எதிர்வரும் திங்கட் கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைஸிடமிருந்து இது குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் நாம் இந்த கட்டுரையில் அவற்றை இணைப்பதற்கு காத்திருக்கின்றோம்.

ஏர்பஸ் A330-200 அகல உடல் விமானம் (Airbus A330-200  wide-body aircraft )

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கடற்படையில் சேர்க்கப்படும் முதல் அகல-உடல் விமானம் (wide-body aircraft)  இதுவாகும். 

இந்த விமானத்தில் பயணிகளின் வசதிக்காக wireless in-flight  பொழுதுபோக்கு மற்றும் ஒவ்வொரு இருக்கையிலும் தனிப்பட்ட USB சார்ஜிங் போர்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இது இரண்டு Rolls-Royce Trent 700 என்ஜின்களால் இயக்கப்படுகிறது மற்றும் 18 வணிக வகுப்பு (Business  Class) மற்றும் 242 பொருளாதார வகுப்பு (Economy Class) இருக்கைகளுடன் இரண்டு வகுப்பு கட்டமைப்பை வழங்குகிறது. 

இந்த விமானம் நீண்ட தூரம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுகிய தூர வழித்தடங்களுக்கு சேவை செய்யக் கூடியது. 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணைந்த ஏர்பஸ் A330-200 விமானம் புதிதாக கொள்வனவு செய்யப்பட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன் அந்த விமானம் நீடித்த குத்தகையின் கீழ் 8 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில்  பிரான்சில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து ஸ்ரீலங்கள் விமான சேவைக்காக பெற்றுக்கொண்ட விமானம் என்பது கண்டறியப்பட்டது.

அத்துடன் இந்த விமானமானது புத்தம்புதிய விமானம் அல்ல எனவும் ஏற்கனவே பாவனையில் இருந்த விமானமொன்றையே இவ்வாறு குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் A330-200 விமானத்தை  புதிதாக கொள்வனவு செய்ததா?

Written By: Suji Shabeedhran  

Result: Missing-Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *