நீர்கொழும்பு சிறைச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களா இவை?

கடந்த ஜூலை 05 மற்றும் 06, ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறை, நாட்டின் மிக மோசமான சிறைச்சாலை சம்பவங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் என ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை காணமுடிந்தது. எனவே அந்த புகைப்பட்டம் மீட்கப்பட்ட ஆய்தங்களின் படமா என்பது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் TIN இலக்கத்தை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதா?

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுவரும் வரி தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றம் அது குறித்த சட்டங்கள் சமூகத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் தற்போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனைவரும் பெற வேண்டும் எனவும் அவ்வாறு பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்து பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பான தெளிவினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

மஹிந்தவிற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்த மக்கள் கூட்டத்தைக் காட்டும் புகைப்படமா இது? 

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை இந்த நாட்களில் பரவலாகப் பேசப்படும் ஒரு தலைப்பாக மாறியுள்ளது. இதற்கு இணையாக, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறித்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். முன்னாள் ஜனாதிபதியின் இந்த வருகையின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துவிட்டதா?

இந்தியாவின் தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது. ஆனால் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற பெரும்பான்மையை பெறாத காரணத்தினால் முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்பதில் இழுபறி நிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

பொது சேவைகளுக்கான VAT வரி 2.5% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதா? 

எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள வட் வரித் திருத்தச் சட்டத்தின் மூலம் வட் (VAT) வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றது. இது குறித்த உண்மையைக் கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு பின்வருமாறு. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் தேசிய மக்கள் சக்தியின் AKD அரசாங்கம் அமைத்து 02 வருடத்திற்குள்; 1.VAT வற் வரி […]

Continue Reading

ஓரியன் விண்கலம் பூமியை வந்தடைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களா இவை?

முழு உலகினதும் கவனத்தை ஈர்த்த ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ், நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற ஓரியன் விண்கலம் கடந்த 10 ஆம் திகதி  பாதுகாப்பாக பூமியை வந்தடைந்தது. இவ்வாறு விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு புகைப்படங்கள், காணொளிகள் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அவை தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived […]

Continue Reading

நாட்டின் வெப்பநிலை 55°C வரை அதிகரிக்கும் என கடும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதா?

தற்போது நிலவும் வெப்பமான வானிலை என்பது நாட்டின் அநேகமான பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது. பிரதான ஊடகங்களும், நிலவும் இந்த  கடும் வெப்பம் குறித்து அதிகளவான செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், சமூக ஊடகங்களில் இது தொடர்பான பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய தகவல் தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் உண்மைக் கண்டறியும் ஆய்வை மேற்கொண்டிருந்தது. தகவலின் விவரம் […]

Continue Reading

விரிவுரையாளர் கொலை வழக்கில்  சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தேகநபர் சார்பில் ஆஜராகினாரா?

யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தின் பெண் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குறித்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மகள் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகியுள்ளார் என தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Threads | […]

Continue Reading

மன்னாரிலுள்ள எண்ணெய் களங்களிலிருந்து விரைவில் எண்ணெய் கிடைக்கும் என அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தாரா?

இலங்கையில் கனிம எண்ணெய் ஆராய்ச்சியானது தற்போது ஆரம்பமான ஒன்றல்ல. 1974ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் மன்னார் தீவில் பேசாலை பகுதியைச் சுற்றிய பகுதிகளில் எண்ணெய் ஆய்வுகளை ஆரம்பித்தது. 2011ஆம் ஆண்டு மன்னார் படுகையில் செயலில் உள்ள கனிம எண்ணெய் அமைப்பு இருப்பது அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தப்பட்டாலும், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் எண்ணெய் உற்பத்தி இன்னும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது. எனினும், 2025ஆம் ஆண்டு மன்னார் எண்ணெய் களங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி […]

Continue Reading

இஸ்ரேல் படையினர் CCTV கேமராக்களை அகற்றுவதாக பகிரப்படும் காணொளியின் உண்மை என்ன? 

ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையில் நிலவும் போர் பதற்மானது மத்திய கிழக்கு நாடுகளையும் தற்போது தாக்கி வருகிறகு இந்த சூழலில் போரை மையப்படுத்தி பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் இஸ்ரேலின் ரகசியங்கள் கசியாமல் இருப்பற்காக, அந்நாட்டு குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ளCCTV கண்காணிப்புக் கேமராக்களை அந்நாட்டுப் படையினர் அதிரடியாக அகற்றி வருவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் […]

Continue Reading

சவுதி நாட்டிலிருந்து மக்கள் வெளியேறுவதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் நிலவும் இந்த போர் நிலைமையானது மத்திய கிழக்கு நாடுகளையும் பெரிதும் பாதித்துள்ளது. அந்தவகையில் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களை நோக்கி ஈரான் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் இடம்பெறும் தாக்குதல்கள்கள் காரணமாக சவுதி நாட்டிலிருந்து மக்கள் வெளியேறுவதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  […]

Continue Reading

எப்ஸ்டீன், கொவிட் தொற்றுநோய் ஒத்திகை தொடர்பில் பில் கேட்ஸுடன் உண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாரா?

ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) மூலம் 2017 ஆம் ஆண்டில் பில் கேட்ஸ், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் வைரஸ் வகையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொற்றுநோய் ஒத்திகை குறித்து விவாதித்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link எப்ஸ்டீன் – பில் கேட்ஸ் மின்னஞ்சல் கசிவு! […]

Continue Reading

ஜனாதிபதி வருகையால் யாழ்ப்பாணத்தில் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டதா?

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததையடுத்து பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையேயான இலங்கை போக்குவரத்து சபை பஸ் மதியம் 2.30 மணி சேவை யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இடம்பெறவில்லை என தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. எனவே அது குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

அலிசா கார்சன் தொடர்பில் பகிரப்படும் தகவல்களின் உண்மை என்ன?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் விண்வெளி பயணம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றில், அமெரிக்காவின் நாசா ஒரு முன்னணி நிறுவனமாகக் கருதப்படுகிறது.  செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்தை நாசா முதன்முறையாக தரையிறக்கத் தயாராகி வருவதாகவும், அந்த செவ்வாய் கிரகப் பயணத்திற்கு முதல் பெண்ணாக அலிசா கார்சன் என்ற 20 வயது பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் சமீபத்திய நாட்களில் தொடர் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை […]

Continue Reading

சேதமடைந்த பரந்தன் – முல்லைத்தீவு பாலத்தை இந்திய இராணுவம் இரண்டே நாட்களில் புனரமைத்ததா?

கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாரிய சேதங்களுக்கு நாடு முகங்கொடுத்திருந்தது. அந்த பின்னணியில் நாட்டின் பல பகுதிகளில் சேதமடைந்த பாலங்களை மீண்டும் புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் நன்கொடையாக பெய்லி பாலங்களை வழங்கியிருந்தது. அந்த வகையில் அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியிலுள்ள பாலத்தை இந்திய இராணுவத்தினர் இரண்டே நாட்களில் அமைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

 உலகின் மிகப் பெரிய முதலை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

உலகின் மிகப்பெரிய முதலை இந்தியாவில் சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link உலகின் மிகப்பெரிய முதலை… 20 அடி நீளமுள்ள உலகின் மிகப்பெரிய முதலை இந்தியாவில் சமீபத்திய வெள்ளத்தில் கண்டறியப்பட்டது. என தெரிவித்து குறித்த காணொளியானது கடந்த 2025.08.20 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

Tank Cleaner மீன்கள் தண்ணீர் இன்றி  ஒரு மாதம் வரை உயிர் வாழுமா?

Tank Cleaner என்று அழைக்கப்படும் Pleco மீன்கள் ஒரு மாத காலம் வரை தண்ணீர் இன்றி காய்ந்து போனாலும் அதன் மேல் தண்ணீர் பட்டவுடன் அதற்கு மீண்டும் உயிர் வந்துவிடும் என தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் அதிகம் பகிருங்க சொந்தங்களே…! […]

Continue Reading

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முதல் O/L பரீட்சை எப்போது நடத்தப்படும்?

பாடசாலை கல்வி அமைப்பில் ஏற்படும் சீர்த்திருங்கள் மற்றும் இதனால் மாணவர்களின் கல்விச் சுமை அதேநேரம் அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது குறித்தும் சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையை நாம் மறுக்க முடியாது. அந்த வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் பாடசாலை கல்வி அமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த தெளிவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

கடந்த அரசினால் வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்த்து தற்போதைய அரசினால் ரத்து செய்யப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்த்து தற்போதைய அராசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில்  தேசிய பாடசாலை அந்தஸ்த்து ரத்து -அரசு அதிரடி- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார […]

Continue Reading

கொத்மலை – பூண்டுலோயா வீதியில் இடம்பெற்ற மண்சரிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழைபெய்து வருகிறது. அந்தவகையில் தற்போது கொத்மலை – பூண்டுலோயா வீதியில், கல்கொரிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  கொத்மலை – பூண்டுலோயா வீதியில் கல்கொரிய […]

Continue Reading