
சில நேரங்களில் பிரதான ஊடகங்களில் வெளியாகும் செய்திகளினால் மக்கள் தவறாக வழிநடத்தப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதனை எம்மால் பாரக்க முடிகின்றது. அந்த வகையில் தற்போது நாட்டில் இயற்கையின் போரத்தாண்டவத்தினால் ஏற்பட்ட அழிவுகளை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்து என ஊடகங்களில் செய்திகள் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

“முழு நாடும் அனர்த்த நிலையில் கடினம் என்றால் எம்மிடம் நாட்டை கொடுங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்ததாக 2025.11.27 ஆம் திகதி பதிவொன்று சமூக ஊடகங்களில் பதிவெற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செலவினங்கள் மீதான வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றில் நடைபெற்றது.
இதன்போது, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நாட்டின் பேரிடர் நிலைமை குறித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
எனவே இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் இயற்கை பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் நாட்டை எம்மிடம் ஒப்படைக்கவும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளாரா என நாம் ஆராய்ந்தோம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் தமது உரையின் போது, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பான நிலையை அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக ஒரு அனர்த்த நிலையாக அறிவிக்காததை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
அத்துடன் மிக விரைவில் நெருக்கடிக்கும் சிரமத்திற்கும் ஆளாகும் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்கு உரிய அதிகாரிகளுக்கு வழிமுறைகள் வழங்கி உடனடியாக அனர்த்த நிலை ஒன்றை அறிவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் 2025.11.27 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பின்னர், விவசாயம், கால்நடை வளம், நில மற்றும் நீர்வள அமைச்சின் செலவுகள் சார்ந்த விவாதத்தில் கருத்து தெரிவிக்கையில், விவசாயத்தை முன்னேற்ற அரசு நடைமுறையில் செயல்படுத்தும் திட்டங்கள் என்னென்ன என்பதை கூற வேண்டும் என்றும், நீர்வள மேம்பாட்டிற்காக எதுவும் செய்யப்படவில்லை என்றும், தேசிய நீர்வள புதுப்பிப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்த அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என்றும், எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியவற்றை நடைமுறையில் செயல்படுத்த அரசு தவறி விட்டதாகவும், இன்றைய நிலையில் விவசாயியின் முதுகின் மீது சுமையை ஏற்றி விட்டு கெண்டெய்னர்கள் விடுவிக்கும் நிபுணர்களாக அரசாங்கம் மாறியுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பயிர் செய்கையையும் முன்னெடுத்து வருகின்ற விவசாயியை வலுப்படுத்துதல் அவசியம் என்றும், மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயி சேர்க்கும் பெறுமதியை அதிகரிக்க ஒரு சிறப்பு தேசிய திட்டம் தேவையெனவும், அதற்கு மேலாக நாட்டுக்கு ஒரு தெளிவான விவசாயக் கொள்கை தேவைப்படுகிறதெனவும், இப்போதாவது அரசியல் கண்காட்சிகளை நடத்தாமல் விவசாயியை உண்மையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதை செய்ய முடியாவிட்டால் நாட்டை எதிர்க்கட்சிக்கே ஒப்படைக்குமாறு அவர் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு, நாட்டில் உருவாகியுள்ள இயற்கை அனர்த்த நிலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் நாட்டை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூறவில்லை. ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தத்தைப் பற்றிய அவரது கருத்துகளை தெரிவித்துப் பேச்சை முடித்த பின்னர் அன்றைய நாளுக்கான விவாதத்துக்கிணங்க விவசாயம், கால்நடை வளம், நில மற்றும் நீர்வள அமைச்சின் செலவுகள் பற்றிய கருத்துக்களை தெரிவிக்கும் போது, விவசாயியை பாதுகாக்க முடியாவிட்டால் நாட்டை எதிர்க்கட்சிக்கே ஒப்படைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.
கடந்த 2025.11.27 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு
இருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை முன்னிட்டு, நாட்டை பொறுப்பேற்க வேண்டிய அவசியம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டதாக சில முக்கிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கடந்த 27 ஆம் திகதி பாராளுமன்றில் நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் நாட்டை தம்மிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்ததாக பகிரப்பட்ட தகவல் தவறானது என்பதுடன், அனர்த்த நிலைகள் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்ததன் பின்னர், அன்றை நாளுக்கான விவாத தலைப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே நாட்டுக்கு ஒரு தெளிவான விவசாயக் கொள்கை தேவைப்படுகிறதெனவும், இப்போதாவது அரசியல் கண்காட்சிகளை நடத்தாமல் விவசாயியை உண்மையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதை செய்ய முடியாவிட்டால் நாட்டை எதிர்க்கட்சிக்கே ஒப்படைக்குமாறு அவர் தெரிவித்துள்ளார் என்பது தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:“முழு நாடும் அனர்த்த நிலையில் கடினம் என்றால் எம்மிடம் நாட்டை கொடுங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தாரா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


