
INTRO :
தித்வா’ புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களில் சிக்கி பாதிப்படைந்த மக்களுக்கு வழங்கிய நன்கொடையில் காலாவதியாகிய உணவுகளை இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிதாக ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில்“ இலங்கைக்கு பாகிஸ்தான் உதவுவதை தடுத்ததா இந்தியா! பாகிஸ்தான் அனுப்பிய மோசமான பொருட்கள்! | Pakistan sends expired food to Sri Lanka |
“என இம் மாதம் 3 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு (03.12.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த வாரம் நாட்டை தாக்கிய தித்வா சூறாவளியை அடுத்து, நாட்டிற்கு பல நாடுகள் தொடர்ந்தும் உதவி வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நிவாரணப் பைகள் அணுப்பிவைக்கப்பட்டிருந்தது. குறித்த நிவாராணப் பைகளின் புகைப்படங்கள் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டிருந்தது. குறித்த அரிசி பைகளின் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி திகதி டிசம்பர் 2024, இதனால் காலாவதியான அரிசி வழங்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. (இந்தப் பதிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது.)

மேலும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் இது தொடர்பான புகைப்படங்களுடன் ஒரு பதிவை வெளியிட்டது, அதில் நிவாரணப் பொதியில் அரிசி, உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, இதில் பதிவிட்டிருந்த அரசி பை புகைப்படம் குறித்த பதிவில் இருந்து நீக்கியிருந்தமையும் காணக்கிடைத்தது.

ஆகவே இது தொடர்பாக விளக்கத்தினை நாம் பெறுவதற்கு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொண்டோம்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம்
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்திடம் இது குறித்து நாங்கள் வினவியபோது, புகைப்படங்களில் காட்டப்பட்டுள்ள மஞ்சள் பைகளில் அரிசி இல்லை,அதில் உலர் உணவுப் பொருட்கள் இருப்பதாகவும், அது அனைத்து உலர் உணவுப் பொருட்களையும் உள்ளே வைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு பை என்றும் அவர்கள் கூறினர்.
மீட்பு உதவிக்காக பாகிஸ்தானிலிருந்து வந்த கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட வெற்றுப் பைகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலிருந்து வாங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் காலாவதியாகவில்லை என்றும் அவர்கள் கூறினர். உள்ளூர் சந்தையில் இருந்து வாங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்க மட்டுமே இந்தப் பைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அதன்படி, இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை சேகரிக்கப் பயன்படுத்தப்படும் பைகளில் உள்ள உலர் உணவுப் பொருட்கள் பைகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி திகதியின் அடிப்படையில் காலாவதியானவை என்ற சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தனர்.
எங்கள் கோரிக்கையின் பேரில், பைகளைத் திறந்து அவர்கள் எங்களுக்கு அனுப்பிய வீடியோ கீழே உள்ளது.
இதேபோல், கடந்த மாதம் 29 ஆம் திகதி (29.11.2025), பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பாகிஸ்தான் கப்பலான PNS SAIF இலிருந்து, நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களை இலங்கை கடற்படையினருக்கு கையளித்த புகைப்படங்கள் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் பொதுத் தொடர்பு மற்றும் சர்வதேச பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர்
இது குறித்து நாம் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் பொதுத் தொடர்பு மற்றும் சர்வதேச பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் ஜெனரல் துஷாரா ரோட்ரிகோவை தொடர்புக்கொண்டு வினவியபோது,அரசு நிறுவனங்களின் ஊடாக வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கான வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாவும், சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் தகவலை போன்று அத்தகைய காலாவதியான உதவிகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார்.
தற்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏராளமான உதவிகள் கிடைத்து வருவதாகவும், அரசியல் சூழ்நிலைகள் காரணமாக பல்வேறு தவறான தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் வழங்கிய நிவாரணப் பைகளை விநியோகிப்பதைக் காட்டும் வீடியோ இலங்கை விமானப்படையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பொதிசெய்யப்பட்ட அரிசி பைக்கட்டுகளில் காலாவதியான உணவுப்பொருட்கள் உள்ளடங்கி இருக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:காலாவதியாகிய உணவுகளை இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கியதா..?
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

