கடவுச்சீட்டு விநியோக காரியாலத்தில் தீ விபத்தா…?

Misleading இலங்கை | Sri Lanka


INTRO:  

கடவுச்சீட்டு விநியோக  காரியாலத்தில் தீ விபத்து என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):


Facebook Link  | Archived Link 

சமூக வலைத்தளங்களில் “ பாஸ்போர்ட் ஒபிஸ் பத்துது. நம்முட வெளிநாட்டு கனவும் சேர்ந்து பத்துது 😭 ”இம் மாதம் 27 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (27.12.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

முதலில் நாம் இவ்வாறு சம்பவம் சமீபத்தில் இடம்பெற்றமைக்கான செய்தி எதுவும் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்ததா என ஆய்வினை மேற்கொண்டபோது, கடவுச்சீட்டு விநியோக காரியாலத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு குறித்த சமயத்தில் அதில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுவது என பயிற்சி இடம்பெற்றுள்ளது எம்மால் காணக்கிடைத்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் கடவுச்சீட்டு விநியோக காரியாலத்தில் தீ சம்பவம் என பகிரப்படும் வீடியோ தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பார்த்த போது எடுக்கப்பட்டது என  கண்டறியப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கடவுச்சீட்டு விநியோக காரியாலத்தில் தீ விபத்தா…?

Written By: Fact Crescendo Team  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *