INTRO :
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்கப்பட்டதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ ரணில் பிணையில் விடுதலை அரச நிதியை மோசடி செய்தார் என்று குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. “என இம் மாதம் 22 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு (22.08.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (22.08.2025) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்க சென்றவேளையில், கைது செய்யப்பட்டு அதன் பின்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குறித்த வழக்கு விசாரணை சுமார் 4 மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த விசாரணை வேளையில் முதலில் ரணிலுக்கு பிணை வழங்கப்பட்டதாக பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பின்னர் அது நீக்கப்பட்டது.
எனினும், வழக்கு விசாரணை முடிவில், வருகின்ற ஆகஸ்ட் 26 (26.08.2025) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. Link
நேற்று வெலிகட சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க கொண்டு செல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி தற்போது விளக்கமறியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. link
வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் திகதி இது குறித்த வழக்கு தொடர்பான மேலதிக தகவலினை அறியப்படுத்துவோம்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வில், முன்னாள் ஜனாதிபதி ரணில் பிணையில் விடுதலை என பரவும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team