
INTRO :
இலங்கையில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்ட இந்திய இராணுவம் இலங்கை வந்தடைந்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ”நம் நோக்கம் மக்களை பாதுகாப்பதாக மட்டுமே இருக்கவேண்டும் என விரும்புகிறோம் …. ”
” கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம். நேற்று நள்ளிரவு, ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையை பாதுகாக்கும் நோக்கில் “ என இம் மாதம் 01 ஆம் திகதி (01.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நமது குழுவினர் இது தொடர்பாக உண்மை தன்மையினை கண்டறிய இலங்கையில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தினை தொடர்புக்கொண்டு வினவிய போது, இது முற்றிலும் போலியான தகவல் என அவர்கள் எமக்கு உறுதிபடுத்தினர்.
இதனை மேலும் உறுதி செய்துக்கொள்ள நாம் இலங்கை விமானப்படையின் ஊடகப்பேச்சாளரை தொடர்புகொண்டு வினவிய போது, குறித்த விடயம் போலியானது என தெரிவித்தார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பாக ஓர் ஊடக அறிக்கையினையும் வெளியிட்டு இது உண்மைக்கு புறம்பான செய்தி என்று வெளியிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.

அதில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்ளை நாம் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, கடந்த ஆண்டு நடைபெற்ற ‘மித்ர சக்தி’ என்று அழைக்கப்படும் இந்திய-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியின் போது வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படங்கள் கொண்டு சித்திரிக்கப்பட்டுள்ள தகவல் என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம் என்று பரவும் செய்தி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம்; உண்மை என்ன தெரியுமா?
Fact Check By: S G PrabuResult: False

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team