டக்ளஸ் தேவானந்தா வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள் என பரவும் தகவல் உண்மையா ?

Misleading இலங்கை | Sri Lanka


INTRO

டக்ளஸ் தேவானந்தா வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link  | Archived Link 

சமூக வலைத்தளங்களில் “ கொழும்பிலிருந்து வந்த டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள்! 

விசேட அதிரடிப்படை சுற்றி வளைத்து கைது!!

டக்ளசின் உதவியாளர் ஒருவர் ஐஸ் மற்றும் ஹேரோயின் போதைப்பொருட்களுடன் டக்ளசின் சிறிதர் தியேட்டடுக்கு முன் உள்ள டக்ளசின் தம்பியாருக்கு சொந்தமான கட்டடத்த்தில் வைத்து அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த போதைப்பொருட்களை டக்ளஸ் கொழும்பிலிருந்து வந்த போது அவரது வாகனத்தில் கொண்டு வந்ததாக பொலிசாரின் விசாரணையில் டக்ளசின் உதவியாளர் கூறியுள்ளதாகத் தெரியவருகின்றது. 

டக்ளசின் ஈ.பி.டி.பி உறுப்பினராக குகப்பிரியனின் தம்பியே இவ்வாறு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். குகப்பிரியனும் ஏற்கனவே போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் குறித்த நபரை டக்ளஸ்தேவானந்தா புனர்வாழ்வுக்கு அனுப்பியதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை டக்ளசின் இன்னொரு கூட்டாளியான ஈ.பி.டி.பி தவராசாவின் மகனும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் பல திருட்டு வேலைகள் செய்து பிடிபட்டு தவராசாவால் புனர்வாழ்வுக்கு அனுப்பட்டவர் எனவும் தெரியவருகின்றது.”இம் மாதம் 28 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (28.01.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த செய்தி தொடர்பாக பிரதான ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறு எவ்வித செய்தியும் பிரதான ஊடகங்களில் வெளியாகி இருப்பதை எம்மால் காணக்கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து இது தொடர்பாக நாம் பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலரை தொடர்புக்கொண்டு வினவியபோது, நபர் ஒருவர் கைது செய்யப்பட்டது உண்மை எனவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் வானகத்தில் தான் குறித்த போதை பொருள் கொண்டுவரப்பட்டதாக பரவும் தகவல் அவரின் நற்பெயரை பாதிக்கும் விதமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நாம் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்புக்கொண்டு வினவியபோது, அது குறித்தான தமது முழுமையான விளக்கத்தினை அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

சமூகவலைத்தளங்களில் பரவுகின்றதை போன்று அவரின் வாகனத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டது, சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது போன்ற செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை என குறித்த பேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நாம் பொலிஸ் தலைமையகத்திற்கும் தொடர்புக்கொண்டு வினவியபோது, அவ்வாறு எவ்விதமான செய்தியும் தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தனர்.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், டக்ளஸ் தேவானந்தா வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள் என பகிரப்படும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:டக்ளஸ் தேவானந்தா வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள் என பரவும் தகவல் உண்மையா ?

Written By: S.G.Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *