
INTRO :
இந்திய பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள இந்தியர்களை வணங்குகிறேன் என இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” இந்தியர்களை வணங்குகிறேன் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியிலும் தேசத்தின் பிரதமர் மீது நம்பிக்கை வைத்து பொறுமை காக்கும் இந்தியர்களை வணங்குகிறேன் இலங்கையில் நடைபெறும் போராட்டங்களின் காரணமாக பதவி விலகிய பிரதமர் மகிந்த ராஜபக்சே உருக்கம் “ என இம் மாதம் 11 ஆம் திகதி (11.05.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியிலும் தேசத்தின் பிரதமர் மீது நம்பிக்கை வைத்து பொறுமை காக்கும் இந்தியர்களை வணங்குகிறேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக பரவுகின்ற புகைப்படத்தின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த பதிவினை பாலிமர் நியூஸ் உண்மையிலேயே வெளியிட்டதா என அவர்களின்உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஆய்வினை மேற்கொண்ட போது அவர்கள் வெளியிட்டிருந்த உண்மையான நியூஸ் கார்டு எமக்கு கிடைக்கப்பெற்றது.
எனவே, நாம் ஆய்வு செய்த நியூஸ் கார்டு பாலிமர் பெயரில் பகிரப்படும் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில், இந்திய பிரதமர் மோடியை நம்பு இந்தியர்களை வணங்குகிறேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக பொலிமர் நியூஸ் கார்ட் என பகிரப்படும் புகைப்படம் போலியானது என உறுதி செய்யப்படுகிறது.
இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இந்திய பிரதமர் மோடியை நம்பும் இந்தியர்களை வணங்குகிறேன் என மஹிந்த தெரிவித்தாரா ?
Fact Check By: S G PrabuResult: Altered

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team