
INTRO :
பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆப்கானிஸ்தான் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில்“ பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்… ராணுவ நிலைகள் மீது தாக்குதல்
பாகிஸ்தான் ஜெட் விமானம் எரிந்து சாம்பல் ஆனது…
பாக்கிஸ்தான் ராணுவத்தினர் 18 பேர் பலி. பல வீரர்கள் காயம்
“என இம் மாதம் 12 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (12.10.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூகவலைத்தளத்தில் பகிரப்படும் குறித்த காணொளியை புகைப்படமாக நாம் தேடுதல் மேற்கொண்டபோது கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் இடம் பெற்ற விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என காணக்கிடைத்தது.
இது தொடர்பாக NDTV வெளியிட்ட யூடியூப் காணொளியும் எமக்கு கிடைக்கப்பெற்றது.
அதற்கமைய இது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மெர் பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த விமானத்தில் பயணித்த இரு போர் விமானிகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. BBC news link | Thanthi tv
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு, அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றது. இந்த சூழலில், காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது,
ஒரு வாரமாக ஆப்கானிஸ்தான் மற்றும் -பாகிஸ்தான் இடையே எல்லையில் கடுமையாக சண்டை நடந்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை இரு நாடுகளுடன் போர் நிறுத்துவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.
மேற்காசிய நாடுகளான கத்தர் மற்றும் துருக்கி இரு நாடுகளிடமும் அமைதிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் குழுக்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் மேற்கொண்ட பேச்சுவார்தையில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது. Link
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆப்கானிஸ்தான் என பகிரப்படும் காணொளியானது தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆப்கானிஸ்தான் என பரவும் காணொளி உண்மையா…?
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

