
INTRO :
கெரண்டி எல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வேலி என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் ”நுவரெலியாவில் விபத்துக்குள்ளான பகுதியில் அதிக பாதுகாப்பு வேலி“ என இம் மாதம் 15 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (15.05.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. virakesari.lk
இணையத்தில் தற்போது வைரலாக பரவுகின்ற காணொளியின் சில பகுதிகளை புகைப்படமாக மாற்றி, ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது கடந்த 2023 ஆம் ஆண்டு நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் போது அது நடந்து சில தினங்களில் பின்னர் தற்காலிகமாக போடப்பட்ட பாதுகாப்பு வேலியினை விமர்ச்சித்து அன்றைய காலக்கட்டத்தில் பகிரப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.
கெரண்டி எல்ல பகுதியில் தற்போதைய நிலை
நாம் கெரண்டி எல்ல பகுதியில் விபத்து இடம்பெற்ற இடத்தின் தற்போது நிலை குறித்து நுவரெலிய வீதி அபிவிருத்தி அதிகாரசபையை தொடர்புக்கொண்டு வினவியபோது, தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பிற்காக தற்காலிகமாக வேலி இடப்பட்டுள்ளதாகவும், அவ்விடத்தில் மண் வெட்டியால் கூட வெட்டி எதுவும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
குறித்து விபத்து தொடர்பாக விசாரணைகள் இன்று வரையில் இடம்பெற்று வருவதால், அவ்விடத்தில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ள முடியாது எனவும், மக்கள் குறித்த பகுதியினை பார்வையிட செல்லுவதால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் குறித்த தற்காலிக வேலி தடியினால் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், குறித்த கெரண்டி எல்ல பகுதியில் நிலையான பாதுகாப்பு வேலியினை இடுவதற்கு திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நாம் குறித்த பகுதியில் தற்போதைய நிலை குறித்தான புகைப்படத்தினை பெற முயற்சித்தும் இன்னும் அதற்கான பதில் எட்டப்படவில்லை. புகைப்படம் கிடைக்கப்பெற்றதுடன் நாம் இந்த ஆய்வறிக்கையில் பதிவேற்றம் செய்வோம்.
நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் தற்போதைய நிலை
இணையத்தில் அன்றைய காலத்தில் பரவிய குறித்த காணொளி தொடர்பாக நாம் கொத்மலை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினை தொடர்புக்கொண்டு வினவியபோது, குறித்த பகுதியில் நிலையான இருப்பு பாதுகாப்பு வேலி இடப்பட்டுள்ளதாக எமக்கு தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் ஊடகவியலாளர்
இதனை நாம் உறுதி செய்ய நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் உள்ள ஊடகவியலாளரை தொடர்புக்கொண்டு வினவியபோது, அப்பகுதியில் நிலையான பாதுகாப்பு வேலி இடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவரிடம் நாம் குறித்த இடத்தின் புகைப்படத்தினை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளநிலையில், அது கிடைத்தவுடன் இக்கட்டுரையில் அதனை பதிவேற்றம் செய்கின்றோம்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் கெரண்டி எல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வேலி என பரவும் காணொளிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் அமைந்திருந்த தற்காலிகமான வேலி எனவும், அப்பகுதியில் நிலையான வேலி அமைக்கப்பட்டுள்ளது எனவும் எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:கெரண்டி எல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வேலி என பரவும் காணொளி உண்மையா?
Written By: S G PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team