1400 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னனால் சிவன் கோயிலில் செதுக்கிய சிற்பமா இது?
INTRO :
இரண்டாம் நரசிம்மவர்மன் தாளகிரி சிவன் கோயிலில் செதுக்கிய சிற்பம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் ” 1400 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மனால் கட்டப்பட்ட தாளகிரி சிவாலயத்தில் கம்ப்யூட்டர் மற்றும் கீ போர்டுடன் ஒரு சிற்பம் கல்லிலே சுவற்றில் உள்ளது இது எப்படி சாத்தியம் அப்போது மின்சாரம் இல்லை எந்த ஒலி ஒளியை பயன் படுத்தியிருப்பார்கள் அல்லது எந்த வழியை கையாண்டிருப்பார்கள் ! “ என இம் மாதம் 28 ஆம் திகதி (28.07.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இரண்டாம் நரசிம்மவர்மன் தாளகிரி சிவன் கோயிலில் செதுக்கிய சிற்பம் என பகிரும் புகைப்படம் தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது அமேசான் இணையதளத்தில் An Anthology of Science Fiction from Latin America and Spain என்ற புத்தகத்தின் அட்டை படம் என கண்டறியப்பட்டது.
இணையத்தில் விற்பனை செய்யப்படும் புத்தகம் ஒன்றின் அட்டைப்படத்தினை எடுத்து, உண்மையாகவே பல்லவர்கள் காலத்தில் செதுக்கப்பட்ட கோயில் சிற்பம் என பகிரந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:1400 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னனால் சிவன் கோயிலில் செதுக்கிய சிற்பமா இது?
Fact Check By: S G PrabuResult: False