படிப்பறிவில்லாத மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டத்தின் இலக்கை எட்ட முடியவில்லை என கர்தினார் கூறினாரா ?
INTRO :
படிப்பறிவில்லாத மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டத்தின் இலக்கை எட்ட முடியவில்லை என கர்தினார் கூறியதாக சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் ” படிப்பறிவில்லாத மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டத்தின் இலக்கை எட்ட முடியவில்லை “ என இம் மாதம் 21 ஆம் திகதி (21.07.2022) யூடியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
பேராயர் கர்தினார் மெல்கம் ரஞ்சித் அவர்கள் இப்படியொரு கருத்தை வெளியிட்டாரா என்று விசாரிப்பதற்காக முதலில் கொழும்பு பேராயர் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோவிடம் வினவினோம்.
அப்பொழுது பேராயர் கர்தினார் அவ்வாறான கூற்றினை முன்வைக்கவில்லை என எமக்கு உறுதிசெய்தார்.
மேலும், பேராயரின் உத்தியோகபூர்வ இலச்சினையில் இயங்கும் NEWS - ARCHDIOCESE OF COLOMBO என்ற பெயரில் இயங்கும் பேஸ்புக் பக்கம் மாத்திரமே உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் எனவும், பேராயருக்கு தனிப்பட்ட பேஸ்புக் கணக்கு இல்லை எனவும், பேராயரின் பெயரில் இயங்கும் ஏனைய பக்கங்கள் போலினவை எனவும் தெரிவித்தார்.
மேலும், மேற்படி குறிப்புகள் பதிவிடப்பட்ட பேராயர் கர்தினார் மல்கம் ரஞ்சித் என்ற பெயரில் பேணப்பட்டு வந்த முகநூல் பக்கம் தற்போது இயங்கவில்லை.
நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய விமான விபத்தில் இலங்கை ஜனாதிபதி மரணம் என பகிரப்படும் செய்தி போலியானது என உறுதி செய்யப்படுகிறது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:படிப்பறிவில்லாத மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டத்தின் இலக்கை எட்ட முடியவில்லை என கர்தினார் கூறினாரா ?
Fact Check By: S G PrabuResult: False