2019 ஆம் ஆண்டிருந்த அமைச்சரவை என பரவும் புகைப்படத்தின் உண்மை தெரியுமா?

Misleading இலங்கை | Sri Lanka


INTRO:  
2019 ஆம் ஆண்டிருந்த அமைச்சரவையும் இன்று அமைந்துள்ள அமைச்சரவையும் என பரவும் இரு புகைப்படங்களை ஒப்பிட்டு ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த அறிக்கை போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link |  Archived Link 

சமூகவலைத்தளங்களில் இன்று இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனத்தினை தொடர்ந்து எடுத்துகொண்ட புகைப்படத்துடன் 2019 ஆண்டில் அமைந்த அமைந்த அமைச்சரவை என்ற கருத்தில் 2024.11.18 ஆம் திகதி இன்று பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் அதிர்வு என்ற இணையத்தள பக்கமொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதனையும் எம்மால் காண முடிந்தது. குறித்த செய்தியை பார்வையிட

Fact Check (உண்மை அறிவோம்)
நாம் 2019 ஆம் ஆண்டு என பரவிய புகைப்படத்தினை நாம் நன்கு அவதானித்த போது, அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே இருக்கின்றார். 

மேலும் 2019 ஆண்டு இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மட்டுமே இடம்பெற்று அதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவே வெற்றி கண்டார். 

ஆகவே நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வின்போது, இது 2010 ஆம் ஆண்டு  நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் பின்னர் இடம்பெற்ற அமைச்சரவை பதவி நியமனத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

News Link 

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் அமைந்த அமைச்சரவை புகைப்படமும் எமக்கு கிடைக்கப்பெற்றது. குறித்த அமைச்சரவையில் 16 பேர்கள் கொண்ட அமைச்சரவையும் 35 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 3 பிரதி அமைச்சர்களும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

alamy.com | bbc | AP New 

மேலும் நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை நியமனம் பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

President Sri Lanka | News Link 

நாம் 2010,2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அமைந்த அமைச்சரவை உறுப்பினர்கள் எடுத்த குழு புகைப்படத்தினை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு பார்த்தோம். அப்போது 2019 ஆம் ஆண்டு என பகிரப்படும் புகைப்படம் 2010 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை என்பது ஆதாரத்துடன் எம்மால் கண்டறியமுடிந்தது.

இதற்கமைய 2019 ஆம் ஆண்டு அமைச்சரவை என கருத்து தெரிவிக்கும் வண்ணம் பகிரப்படும் புகைப்படம் 2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion:முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:2019 ஆம் ஆண்டிருந்த அமைச்சரவை என பரவும் புகைப்படத்தின் உண்மை தெரியுமா?

Fact Check By: S.G.Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *