குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசு ஜெர்மனி தம்பதியால் தத்தெடுக்கப்பட்டதா?

False இலங்கை | Sri Lanka


INTRO :

குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசு ஜெர்மனி தம்பதியால் தத்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link 

சமூகவலைத்தளங்களில் “කෙතක අතහැර දැමූ බිළිඳෙකු ජර්මානු යුවළක් විසින් හදා වඩා ගන්නා ලදී.

வயல் வெளியில் வீசப்பட்ட சிசு ஜெர்மன் தம்பதியால் தத்தெடுக்கப் பட்டது!

A baby thrown into a field was adopted by a German couple.

முழு விபரத்தை காண : 

Whatsapp : https://whatsapp.com/channel/0029VaeCNH9GpLHQeT73CJ2A “என இம் மாதம் 24 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு  (24.07.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மைஅறிவோம்)

குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் இருந்து பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று உயிருடன் கடந்த வாரம் வியாழக்கிழமை (17.07.2025) மீட்கப்பட்டதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர் 

குறித்த குழந்தை சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிசுவினை தத்தெடுப்பதற்கு பல்வேறு நபர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து தொடர்புக்கொண்டதாக பொலிஸார் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது. Hiru News

இந்நிலையில் குறித்த குழந்தையினை தத்து கொடுத்து இருப்பின் அது தொடர்பாக பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளதா என ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான எவ்விதமான செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

மாவத்தகம பொலிஸார்

இது தொடர்பில் நாம் மாவத்தகம பொலிஸார் நிலையத்தினை தொடர்புக்கொண்டு வினவியபோது, குறித்த குழந்தையின் தாய் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும், தத்து கொடுப்பதற்கான பணிகள் எதுவும் தற்போது மேற்கொள்ளவில்லை என்பதோடு குழந்தை குருணாகல் வைத்தியசாலையில் தான் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.

மேலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற தகவல் முற்றிலும் போலியானது என எமக்கு உறுதி செய்தனர்.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசு ஜெர்மனி தம்பதியால் தத்தெடுக்கப்பட்டது என பகிரப்பட்ட செய்திகள் முற்றிலும் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok | Youtube 

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசு ஜெர்மனி தம்பதியால் தத்தெடுக்கப்பட்டதா?

Fact Check By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *