INTRO :
பாரிய கல்லை தூக்கி செல்லும் மனிதர்கள் என ஒரு புகைப்பட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “இது ஒரு பழைய படம்

இந்த படத்தில் இருப்பவர்கள் எப்படி இந்த கல்லை தூக்கி இருப்பார்கள்... ஒன்று அந்தக் காலத்தில் புவியீர்ப்பு விசை குறைவாக இருந்திருக்க வேண்டும்... அல்லது அந்த மனிதர்கள் மிகுந்த பலசாலிகளாக இருந்திருக்க வேண்டும்.... ஏனென்றால் அந்தக் காலத்தில் போட்டோஷாப் என்பதெல்லாம் கிடையாது.. ஆகவே இது ஒரிஜினல் போட்டோவாக தான் இருக்க வேண்டும்... “ என இம் மாதம் 24 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (24.06.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதா என கண்டறிய நாம் Hive Moderation என்ற செயற்கை நுண்ணறிவை கண்டறியும் இணையத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வினை மேற்கொண்டோம்.

அதில் குறித்த புகைப்படம் 95.9% செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

மேலும் fakeimagedetector.com இணையத்திலும் இதனை நாம் ஆய்வு செய்த போது, இது கணினி மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கல்லை தூக்கி செல்லும் மனிதர்கள் என பரவும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கல்லை தூக்கி செல்லும் மனிதர்கள் என பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: S.G.Prabu

Result: False