கோவிலில் சட்டையின்றி ஜனாதிபதி அநுரவின் புகைப்படம் உண்மையா?

Misleading இலங்கை | Sri Lanka


INTRO :

கோவிலில் சட்டையின்றி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புகைப்படம் என ஒரு புகைப்பட பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.



தகவலின்விவரம் (What is the claim):

X Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் இலங்கை அதிபர் என்று நினைக்கிறேன்…👍👍👍👏👏👏

திராவிடியாக்களுக்கு இந்த போட்டோவை பார்த்தால் பிடிக்காது. “என இம் மாதம் 24 ஆம் திகதி 2026 ஆம்ஆண்டு  (24.01.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த 15 ஆம் திகதி (15.01.2026) அன்று யாழ்ப்பாணம், வேலணை,  ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டிருந்தார்.

மேலும் குறித்த யாழ்ப்பாண விஜயத்தின் போது, ஜனாதிபதி அங்குள்ள கோவிலுக்கு சென்றிருந்தமையும் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்தது. Virakesari 

ஆகவே இணையத்தில் வைரலாகும் குறித்த புகைப்படத்தினை போன்று ஜனாதிபதி கோவிலுக்கு மேற்சட்டையின்றி சென்றாரா என அறிய நாம் முதலில் ஜனாதிபதி ஊடகப்பிரிவினை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவர்கள் குறித்த புகைப்படம் போலியானது என தெரிவித்தனர்.

நாம் ஜனாதிபதி அநுரவின் சமூகவலைத்தளங்களை ஆய்வு செய்த போது, அவர் ஆலயங்களுக்கு சென்ற வேளையில் மேற்சட்டையுடன் சென்றிருந்தமை புகைப்படங்கள் மற்றும் காணொளி வழியாக காணக்கிடைத்தது.

Facebook link

Facebook Link

ஜனாதிபதி யாழ் விஜயத்தின் போது நயினாதீவு கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் கிடைக்கப்பெற்றது.

Facebook

இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தினை நாம் நன்கு அவதானித்த போது அதில் ஜனாதிபதி அநுரவின் உருவ தோற்றம் சற்று மாறுப்பட்டு காணப்பட்டவே இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழ நாம் அதனை செயற்கை நுண்ணறிவை கண்டறியும் கருவியை கொண்டு ஆய்வு செய்தபோது, இது முற்றிலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் கோவிலில் மேற்சட்டையின்றி ஜனாதிபதி அநுர என பகிரப்படும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கபட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:கோவிலில் சட்டையின்றி ஜனாதிபதி அநுரவின் புகைப்படம் உண்மையா?

Fact Check By: S.G.Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *