இஸ்ரேலிய அதிகாரி உயிரிழந்த போது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் புகைப்படங்களின் பின்னணி என்ன?

Misleading சர்வதேசம் | International

ரஃபாவில் நடந்த தாக்குதலில் இஸ்ரேலிய அதிகாரியொருவர் உயிரிழந்ததாகவும், இதன்போது குறித்த அதிகாரியின் மனைவி சம்பவ இடத்தில் மயங்கி வீழ்ந்ததாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் இஸ்ரேல் வானொலி நிலையம் (الإذاعة الإسرائيلية) தெரிவித்தது:

இன்று காலை ரஃபாவில் நடந்த தாக்குதலில், அவரது டாங்கிக்குள் தீப்பற்றி சாம்பலான நிலையில் உயிரிழந்த இஸ்ரேல் அதிகாரி அஷ்கினோலின் மனைவி ஷாஹினார் சோர்ந்துபோய் மயங்கி விழுந்துள்ளார். என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.07.22 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இதன் உண்மை அறியாத பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த பதிவானது கடந்த ஜுலை மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் என தெரிவித்தே பதிவிடப்பட்டிருந்தது. எனவே கடந்த மாதம் காஸாவின் ரஃபா நகரில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை.

எனவே மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவில் பகிரப்பட்ட புகைப்படங்களை நாம் ரிவரஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது குறித்த புகைப்படங்களில் பெண் இராணுவ சிப்பாய் ஒருவர் அழும் புகைப்படமானது கடந்த 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது கண்டறியப்பட்டது.Link

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் இடையே இஸ்ரேலியர்கள் வழக்கமாக வாகனம் ஓட்ட பயன்படுத்தும் வீதியின் ஓரத்தில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வைத்து பாலஸ்தீனியர் ஒருவரால் இஸ்ரேலிய இராணுவ வீரர்  மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கத்திக்குத்து தாக்குதலினால் உயிரிழந்த தனது சக வீரரை பார்த்து இஸ்ரேலிய பெண் இராணுவ வீரர் அழும் புகைப்படமே இது என்பதுவும் உறுதியானது.

மேலும் குறித்த புகைப்படமானது getty images  இல் கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக குறித்த சமூக ஊடகப் பதிவில் இறந்த உடலை இராணுவ வீரர்கள் எடுத்துச் செல்லும் புகைப்படமானது 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட்ட புகைப்படம் என்பதுவும் கண்டறியப்பட்டது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹெப்ரானில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் இரண்டு பாலஸ்தீனிய தாக்குதல்காரர்கள் ஒரு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரரை கத்தியால் குத்திய சம்பவம் இடம்பெற்று  சில நிமிடங்களுக்குப் பிறகு குறித்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் இராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன பாலஸ்தீனியரின் உடலை இராணுவத்தினர் எடுத்துச் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படமே இது என்பது உறுதியானது. BBC

Link

எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு


எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ரஃபாவில் நடந்த தாக்குதலில் இஸ்ரேலிய அதிகாரியொருவர் உயிரிழந்ததாகவும், இதன்போது குறித்த அதிகாரியின் மனைவி சம்பவ இடத்தில் மயங்கி வீழ்ந்ததாகவும் தெரிவித்து பகிரப்படும் புகைப்படங்கள் தவறானது என்பதுடன் அது 2015 ஆம் ஆண்டு பாலஸ்தீனியர் ஒருவரினால் இஸ்ரேலிய இராணுவ வீரர் கொல்லப்பட்ட வேலையில் சக பெண் இராணுவ வீரர் அதை பார்த்து அழும் புகைப்படமே அது என்பதுவும் கண்டறியப்பட்டது.

அதேபோன்று மற்ற புகைப்படமானது 2016 ஆம் ஆண்டு இஸ்ரேலிய இராணுவத்தினால் பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்ட பின்னர் அவரின் உடலை இராணு வீரர்கள் எடுத்துச்செல்லும் புகைப்படம் என்பதுவும் உறுதியானது.எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:இஸ்ரேலிய அதிகாரி உயிரிழந்த போது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் புகைப்படங்களின் பின்னணி என்ன?

Fact Check By: Suji shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *