
ஒலிம்பிக்கில் பாத்திரங்கள் சுத்தம் செய்தல் போட்டியில் இந்திய பெண் முதலிடத்தை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
2025 ஒலிம்பிக்கில் பாத்திரங்கள் சுத்தம் செய்தலில் வெற்றி பெற்றார் இந்தியா என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது 2025.10.10 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதனை உண்மை என எண்ணி பலரும் கமெண்ட் செய்திருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
2025 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்த போட்டி இடம்பெற்றிருப்பதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் பார்க்கும் போது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளானது கடந்த வருடம் பாரிஸில் ஜுலை 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
எனவே அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2028 ஆம் ஆண்டே இடம்பெறவுள்ளமை அனைவரும் அறிந்த விடயமே. அதனடிப்படையில் குறித்த பதிவில் 2025 ஆம் ஆண்டு அதாவது இந்தவருட ஒலிம்பிக் போட்டிகள் என குறிப்பிடப்பட்டிருப்பதே தவறான தகவல் என்பது உறுதியாகின்றது.
அடுத்ததாக ஒலிம்பிக் போட்டிகளில் பாத்திரம் சுத்தம் செய்யும் போட்டிகள் உள்ளனவா என்பதனை நாம் ஆராய்ந்த போது, அதில் பாத்திரம் சுத்தம் செய்வதற்கான போட்டிகள் எதுவும் இல்லை என்பதனையம் அறியமுடிந்தது.
ஆகவே குறித்த காணொளியின் காட்சிகளை புகைப்படமாக மாற்றி நாம் தேடுதலில் ஈடுபட்ட போது, இது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டு இன்ஸ்டகிராமில குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

எனவே நாம் இந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

ஒலிம்பிக் போட்டிகளில் கோடை மற்றும் குளிர்கால விளையாட்டுகளில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்கின்றன, ஒலிம்பிக் போட்டிகள், உத்வேகம் பெறவும், ஒன்றாக இருக்கவும் உலக நாடுகள் ஒன்றிணையும் ஒரு இடமாகவும் கருதப்படுகின்றது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் 2025 ஒலிம்பிக்கில் பாத்திரங்கள் சுத்தம் செய்தல் போட்டியில் இந்திய பெண் முதலிடத்தை பெற்றுள்ளார் என பகிரப்படும் காணொளி போலியானது என்பதுடன் அது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:ஒலிம்பிக்கில் பாத்திரம் சுத்தம் செய்வதில் இந்திய பெண் வெற்றி பெற்றதாக பகிரப்படும் காணொளி உண்மையா?
Fact Check By: Suji shabeedharanResult: False
