கேகாலை மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய பலாப்பழம் என பரவும் காணொளி உண்மையா ? 

Altered சமூகம் | Society


INTRO:  
கேகாலை மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய பலாப்பழம் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link  | Archived Link 

சமூக வலைத்தளங்களில் “ இலங்கை கேகாலை மாவட்டத்தில் பழுத்த உலகின் மிகப் பெரிய பலாப்பழம் 240 kg ”இம் மாதம் 17 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (17.03.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

நாம் முதலில் குறித்த பதிவில் தெரிவித்ததை போன்று சம்பவம் எதுவும் பதிவாகியுள்ளதா என கண்டறிய பிரதான ஊடக இணையத்தளம் மற்றும் அவர்களின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களை ஆய்வு செய்தபோது, அவ்வாறான எவ்விதமான தகவலும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

குறித்த வீடியோவில் சில பகுதிகள் அவதானித்தபோது , இது  செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கி இருக்கலாம் என சந்தேகம் எழவே நாம் அதனை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டமை உறுதிசெய்யப்பட்டது.

நாம் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் சிலரை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவ்வாறான சம்பவம் எதும் பதிவாகியதாக தங்களுக்கு அறிய கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

இதனை மேலும் உறுதிசெய்ய குறித்த பகுதியில் இருக்கும் ஊடகவியலாளரை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவரும் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என எமக்கு அறியத்தந்தார்.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கேகாலை மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய பலாப்பழம் என பரவுகின்ற காணொளியானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கேகாலை மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய பலாப்பழம் என பரவும் காணொளி உண்மையா ?

Fact Check By: S.G.Prabu 

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *