
தாய்லாந்து – கம்போடியா இடையே நிலவி வந்த தொடர் பதற்ற நிலையானது கடந்த வியாழக்கிழமையன்று (2025.07. 24) எல்லைப் பகுதியில் கடுமையான மோதலாக வெடித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த இரு நாடுகளுக்கிடையிலான மோதலின் போது எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இது குறித்த உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
உக்கிரமடைகிறது தாய்லாந்து-கம்போடியா மோதல்.
தாக்கி அ*ழிக்கப்பட கம்போடிய ராணுவ தளம்! என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.07.24 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்த காணொளி தொடர்பான உண்மை அறியாத பலரும் அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
தாய்லாந்து – கம்போடியா இடையேயான மோதல் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்த போதிலும் மேற்குறிப்பட்ட சமூக ஊடகப் பதிவில் உள்ள காணொளி அந்த செய்திகளில் வெளியாகியிருக்கவில்லை என்பதனை நாம் எமது ஆய்வுகளி ஊடாக உறுதி செய்தோம்.
எனவே மேற்குறிப்பிட்ட காணொளியின் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம். இதன்போது இந்த காணொளியானது கடந்த 2025.06.06 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது உறுதியானது.
மேலும் சர்வதேச செய்தி நிறுவனமான Reuters இன் YouTube பக்கத்தில் இந்த காணொளியானது வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கடந்த ஜுன் மாதம் 6 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலின் போது எடுக்கப்பட்ட குறித்த காணொளியானது பல்வேறு சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேற்கு உக்ரைன் நகரமான லுட்ஸ்க் மீது கடந்த ஜுன் மாதம் 6 ஆம் திகதி ரஷ்யா ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது. இதந்த தாக்குதலில் வீடுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் பாரியளவில் சேதமடைந்ததாக சர்வதேச செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.Link
தாய்லாந்து – கம்போடியா இடையேயான மோதல்
தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் எல்லைப் பிரச்சனை, கடந்த வியாழக்கிழமை (2025.07.24) அன்று மீண்டும் தலைதூக்கி, கோரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடும் துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 9 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது நீண்டகாலமாக நீடிக்கும் எல்லைத் தகராறில் ஏற்பட்ட மிக மோசமான உயிரிழப்பாகும். இந்த மோதலில் தாய்லாந்தின் F-16 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தரைவழி குண்டுவீச்சுகளும் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Link | Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok | YouTube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான மோதலின் காணொளி என பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன், அது கடந்த ஜுலை மாதம் 6ஆம் திகதி (2025.06.06) உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள்மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:தாய்லாந்து – கம்போடியா இடையிலான மோதலின் காணொளியா இது?
Fact Check By: Suji ShabeedhranResult: False
