குருணாகலில் வயல் வெளியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தாய் தற்போது பொலிஸாரினால் கண்டுப்பிடிககப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குழந்தையை கைவிட்ட தாயின் ஒப்புதல் வாக்குமூலம் என தெரிவித்து குறித்த காணொளியானது கடந்த 2025.07.23 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்த உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இந்த காணொளியை பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குருநாகல், பரகஹதெனிய சிங்கப்புர வீதியிலுள்ள வயில் வெளியில் இருந்து கடந்த 2025.07.17 ஆம் திகதி பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையொன்று மாவத்தகம பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த குழந்தை தொடர்பான பல்வேறு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த குழந்தையை கைவிட்டுச் சென்ற தாய் பொலிஸாரினால் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்து, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது.
எனவே கடந்த 17 ஆம் திகதி வயிலில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாய் கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தால் அது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை.
மேலும் குறித்த காணொளியில் அத தெரண லோகோ காணப்பட்டமையினை நாம் அவதானித்தோம். எனவே நாம், அத தெரண தொலைக்காட்சியில் இந்த சம்பவம் தொடர்பில் வெளியான செய்தி குறித்து ஆய்வினை மேற்கொண்டோம்.
இதன் போது கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி (2023.03.11) அததெரண youtube பக்கத்தில் இந்த காணொளியானது வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு பயணிக்கவிருந்த ரயிலின் கழிவறையில் கைவிடப்பட்ட சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
பின்னர் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்ட சிசு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அதன் பின்னர் 24 மணித்தியாலங்களுக்குள் குறித்த சிசுவின் தாய் கைது செய்யப்பட்டதுடன் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலமும் வழங்கியிருந்தார்
குழந்தையை எவராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்து அப்படி விட்டுச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இவ்வாறு குறித்த தாய் பொலிஸாரிடம் வழங்கியே வாக்குமூலத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியே இது என்பதுவும் கண்டறியப்பட்டது.Link
மாவத்தகம் பொலிஸ் நிலையம்
எனவே குருநாகலில் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தாய் தொடர்பில் நாம் மாவத்தகம பொலிஸ் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது இந்த குழந்தையின் தாய் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை எனவும் அவரை தேடும் பணிகள் பொலிஸாரினால் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் குறித்த குழந்தை இன்னும் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
Also Read: குருணாகல் வயலில் கண்டெடுக்கப்பட்ட சிசு என பகிரப்படும் மேலும் சில காணொளிகள்!
குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசு ஜெர்மனி தம்பதியால் தத்தெடுக்கப்பட்டதா?
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok | YouTube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கடந்த 17 ஆம் திகதி குருணாகலில் வயலில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாய் கண்டுப்பிடிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி தவறானது என்பதுடன், அது, 2023 ஆம் ஆண்டு ரயிலில் குழந்தையை விட்டுச்சென்ற தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கும் சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள்மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:குருணாகல் வயலில் மீட்கப்பட்ட சிசுவின் தாய் வாக்குமூலம் வழங்கும் காணொளியா இது?
Fact Check By: Suji ShabeedharanResult: Misleading
