அஹமதாபாத் விமான விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட காணொளியா இது?

Misleading சர்வதேசம் | International

கடந்த 2025.06.12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் பல்வேறு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில்,  விமானம் விழுந்து நொறுங்கும் முன்னர் பேஸ்புக்கில் ஒருவர் வெளியிட்ட  Live என தெரிவிக்கப்பட்ட மற்றுமொரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த காணொளியில் அகமதாபாத் விமான விபத்து விமானம் விழுந்து நொறுங்கும் முன்னர் முகநூலில் Live போட்ட நபர் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.06.12 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் அந்த காணொளியை பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

கடந்த 12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம் பெற்ற விமான விபத்தில் ஒரு பயணி மாத்திரமே உயிர் தப்பிய நிலையில் அந்த விமானத்தில் பயணித்த ஏனைய அனைவருமே உயிரிழந்தனர். இவ்வாறான பின்னணில் அந்த விபத்து இடம்பெறும் சந்தர்ப்பத்தில் உண்மையில் பயணியொருவரினால் இவ்வாறு பேஸ்புக் வழியாக நேரடி காணொளியொன்று வெளியிடப்பட்டிருக்குமாயின் அது குறித்து சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும்.

எனவே அது தொடர்பில் நாம் ஆய்வு செய்தபோது அவ்வாறான எந்தவொரு செய்தியையும் சர்வதேச ஊடகங்களில் எம்மால் காணமுடியவில்லை.

மேலும் குறித்த காணொளி வெளியிடப்பட்ட போது, அந்த காணொளி போலியானது, அது பழைய காணொளி என்ற விதத்திலான கமெண்ட்களையும் எம்மால் காணமுடிந்தது.

எனவே அந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, கடந்த 2023 ஆம் ஆண்டு நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தின் போது எடுக்ககப்பட்ட  காணொளியை எமக்கு காணமுடிந்தது.Link | Link

அந்த காணொளியில் குறித்த விபத்து இடம்பெறுவதற்கு முன்னர் பயணியொருவரினால் எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டிருந்தமையையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

நேபாள விமான விபத்து


நேபாளத்தின் Pokhara பகுதியில் 72 பயணிகளுடன் பயணித்த விமானமொன்று 2023 ஆம் ஆண்டு  ஜனவரி 15 ஆம் திகதி விபத்திற்குள்ளானது.

மத்திய நேபாளத்தின் பழைய மற்றும் புதிய விமான நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

விமான நிலையங்களுக்கு இடைப்பட்ட பயண நேரம் 25 நிமிடங்கள் எனவும் விமானம் புறப்பட்டு 20 நிமிடங்களில் இந்த விபத்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 பயணிகள் மற்றும் 04 விமான ஊழியர்கள் குறித்த விமானத்தில் பயணித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த விபத்தின் போது விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கடந்த 12 ஆம் திகதி இந்தியாவின் அஹமதாபாத்தில் விமான விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பயணி ஒருவரால் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகஙடகளில் பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பதுடன், அந்த காணொளியானது  கடந்த 2023 ஆம் ஆண்டு நேபாளத்தில் விமான விபத்து இடம்பெறுவதற்கு  முன்பு பயணியொருவரான எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:அஹமதாபாத் விமான விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட காணொளியா இது?

Written By: Suji Shabeedhran  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *