தேசிய மக்கள் சக்தியினால் அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடமா இது?

இலங்கை | Sri Lanka சமூக ஊடகம்

INTRO :
மாவத்தகம கூட்டுறவு சங்க தேர்தலை தேசிய மக்கள் சக்தி வெற்றி கொண்டதன் பின் அங்குள்ள பாடசாலைக்கு முன்னால் அமைத்துக் கொடுக்கப்பட்ட பஸ் தரிப்பிடம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link 

சமூகவலைத்தளங்களில் “மாவத்தகம கூட்டுறவு சங்க தேர்தலை தேசிய மக்கள் சக்தி NPP வெற்றி கொண்டதன் பின் அங்குள்ள பாடசாலைக்கு முன்னால் அமைத்துக் கொடுக்கப்பட்ட பஸ் தரிப்பிடம் தொழிலாளர் வர்க்கத்தை பறைசாற்றுகிறது “ என கடந்த இம்மாதம் 19 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (19.09.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இணையத்தில் வைரலாகும் குறித்த புகைப்படம் முன்னிலை சோசலிசக் கட்சியின் சின்னத்தினை ஒத்திருப்பதால், முதலில் நாம் குறித்த கட்சியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும், ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிகளின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கங்களிலும் ஆய்வினை மேற்கொண்ட போது குறித்த புகைப்படங்கள் அவற்றில் காணப்படவில்லை. 

இதனை தொடர்ந்து நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, காலி மாவட்டத்தில் கனங்கே கிராமத்தில் ‘மனுஜய மிதுரோ’ என்ற சங்கத்தால் இந்த வடிவமைப்பைக் கொண்ட பேருந்து நிலையம் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட குறிப்பைக் கண்டோம். கனங்கே சிறிபரகும்பா பாடசாலையின் அதிபரினால் குறித்த பேருந்து நிலையம் பிரதேசவாசிகளுக்கு திறந்து வைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook | Archived Link

இது தொடர்பாக எமது குழுவினர் ”மனுஜய மிதுரோ” அமைப்பின் உறுப்பினர் தினில் நயநாதினை தொடர்புக்கொண்டு வினவிய போது, உழைக்கும் மக்களை அடையாளப்படுத்தும் வகையில் குறித்த பேருந்து நிலையத்தை உருவாக்குவதற்கு சுத்தியல் மற்றும் அரிவாள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதில் எவ்வித கட்சியினரின் பங்களிப்பும் இல்லை என தெரிவித்தார். 

கிராமத்தில் உள்ள உறுப்பினர்கள் குழு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சங்கத்தை உருவாக்கி, இந்த அமைப்பின் மூலம் பல சமூக செயல்பாடுகள் செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது குறித்து கனங்க பகுதியிலுள்ள உள்ளூர் செய்தியாளரையும் தொடர்பு கொண்டோம், அவர் கூறுகையில், இந்த பேருந்து நிலையம் கனங்கே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினால் கட்டப்பட்டது என்றும், குறித்த அமைப்பு பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டது என்றும், இந்த வடிவமைப்பின் முக்கிய நோக்கம் கிராமத்தின் அழகு, ஒரு கலை உருவாக்கத்தின் மூலம் கிராமத்திற்கு புகழ் பெற வேண்டும். மேலும் இந்த பேருந்து நிலையத்தில் கவிதைகள், சித்திரங்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் வெளியிட அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் நாம் ஜே.வி.பியின் ஊடகப் பிரிவினரிடம் வினவியதுடன், இது ஒரு அபிவிருத்தித் திட்டமோ அல்லது ஒரு கட்சியின் வேலையோ அல்ல என்றும், ஜே.வி.பிக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் அதன் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார். மேலும், எமது விசாரணையின் போது, ​​முன்னிலை சோசலிசக் கட்சியின் ஊடகப் பிரிவு, மேற்படி புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று எந்தவொரு கட்டுமானத்தையும் கட்சி மேற்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த புகைப்படத்தை ஆய்வு செய்ததில், இலங்கையில் இது போன்ற பேருந்து நிலையம் கட்டப்பட்டதாக தகவல்கள் இல்லை என்றாலும், இந்தியாவில் கேரளா பகுதியில் பல பேருந்து நிலையங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே மாதிரியாக கட்டப்பட்டுள்ளன. 

கேரளாவின் கொல்லம் பகுதியில் உருவாக்கப்பட்ட அத்தகைய பேருந்து நிலையத்தின் புகைப்படம் கீழே உள்ளது.

Alamy | Archived Link

அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் குறித்த செய்தி போலியானது என்ற பதிவினை அவர்கள் பதிவிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, லோகேஷ் விஜய் மோதல் என சினிமா விகடன் செய்தி வெளியிட்டதாக பரவி வருகின்ற சினிமா விகடன் நியூஸ்காட் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எமது சிங்கள பிரிவினர் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:தேசிய மக்கள் சக்தியினால் அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடமா இது?

Written By: S.G.Prabu 

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *