
உலகில் முதன் முதலாக எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவித்து ஒரு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில், உலகிலேயே முதன்முதலாக எடுக்கப்பட்ட புகைப்படம் :
1826 இல் ஜோசப் நிசெஃபோர் நிப்ஸ் என்பவரால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் பிரான்சின் பர்கண்டி பகுதியில் உள்ள நிப்ஸ் தோட்டத்தில் உள்ள ஒரு சாளரத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி ஆகும்.
விரிவான விளக்கம்:
எப்போது: 1826
யார்: ஜோசப் நிசெஃபோர் நிப்ஸ்
(Joseph Nicéphore Niépce)
எங்கு: பிரான்சின் பர்கண்டி பகுதியில் உள்ள நிப்ஸ் தோட்டத்தில் உள்ள ஒரு சாளரத்தில் இருந்து
என்ன: சாளரத்தில் இருந்து 보이는 தோற்றம்
என்ன பெயர்: “View from the Window at Le Gras” நன்றி, என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.27 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் சமூக ஊடகங்களில் இதனை பலரும் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த புகைப்படம் உண்மையில் உலகில் முதன்முதலில் எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தொடர்பில் அறியும் நோக்கில் நாம் அந்த புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் 9 ஆம் திகதி இந்த புகைப்படம் தொடர்பில் dailymail இணையதளத்தில் வெளியான செய்தியை எம்மால் காணமுடிந்தது.
அந்த செய்தியில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படத்தில் 1972 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி தெற்கு வியட்நாமிய விமானம் ஒன்று, வட வியட்நாமில் இருந்து வந்த துருப்புக்கள் என்று தவறாகக் கருதி, டிராங் பேங்கில் உள்ள படைகள் மீது நேபாம் (napalm) குண்டை வீசியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
வியட்நாம் போரின் சின்னமாக கருதப்படும் இந்த புகைப்படத்தில் நேபாம் (napalm) குண்டுவீச்சு தாக்குதலுக்கு இலக்கான கிராமத்தில் இருந்து பல குழந்தைகள் கதறி அழுதபடி ஓடுவதை இந்த புகைப்படம் காட்டுகின்றது.
மேலும் 1972 ஆம் ஆண்டு Associated Press இன் Pulitzer பரிசு வென்ற நிக் வுட் என்பவரால் குறித்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக dailymail செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த செய்தியில் எந்தவொரு இடத்திலும் இது உலகில் முதன் முதலாக எடுக்கப்பட்ட படம் என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
எனவே நாம் இந்த புகைப்படம் தொடர்பில் மேலும் ஆராய்ந்த போது வியட்நாம் யுத்தத்தின் போது குண்டுவீச்சு தாக்குதலுக்கு பயந்து கதறி அழுதபடி ஓடும் குழந்தைகளின் நடுவில் ஆடைகளின்றி ஒன்பது வயது சிறுமியான கிம் ஃபுக், இருக்கும் இந்த புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் பெறும் பேசுபொருளாகவே காணப்பட்டது என கூறலாம்.
மேலும் ‘Napalm Girl’ என்றே இந்த புகைப்படம் பெரிதும் பேசப்பட்டது. அதற்கு இந்த புகைப்படத்தில் ஆடையின்றி ஓடும் 9 வயது சிறுமியே காரணமாக அமைந்துள்ளார்.
மேலும் கூகுள் தேடுதலில் ‘Napalm Girl’ என தேடும் போது அந்த புகைப்படத்தினை மாத்திரமே எம்மால் காணமுடிந்தது.
அத்துடன் இந்த வருடம் (2025) மீண்டும் இந்த புகைப்படம் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அதில் இந்த புகைப்படத்தினை நிக் வுட் எடுக்கவில்லை எனவும் அந்த அதனை Nguyen Than Nghe என்பவரே எடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.Link
‘Napalm Girl’ புகைப்படத்தின் பின்னணி
வியட்நாம் போர் உக்கிரமடைந்திருந்த காலப்பதியில் 1972 ஆம் ஆண்டு உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுக்க பயத்துடன் ஆடையின்றி ஓடிவரும் இந்த சிறுமியின் படம் புகைப்படக் கலைஞர்களின் பெருமிதத்துக்கு உரிய படம் என்றே சொல்லலாம்.
காரணம், இந்த ஒரு படம்தான் 19 ஆண்டுகளாக நடந்து வந்த ஒரு பெரும்போரின் வடுக்களை இதுவரை நினைவில் வைத்து வருகிறது.
அமெரிக்க ஆதரவுடன் வடக்கு வியட்நாமை எதிர்த்து, தெற்கு வியட்நாம் போரிட்ட காலம் அது. அந்த காலத்தில் ட்போட்ட நாப்பாம் குண்டினால் தாக்குதலுக்குள்ளான இந்தச் சிறுமி ஓடி வரும் படம் உலக நாடுகள் மொத்தத்தையும் அப்போது அசைத்துப் பார்த்தது.
இந்தப் படத்தை எடுத்தவர் பத்திரிகையாளர் நிக் வுட் என்றே தெரிவிக்ப்படுகின்றது.
மேலும் நிக்வுட்அந்தச் சிறுமியை புகைப்படம் எடுத்ததோடு நின்றுவிடாமல், அவளுக்கு முதலுதவி செய்து தன் காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் எனவும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உலகில் முதன் முதலில் எடுக்கப்பட்ட புகைப்படம்
உலகின் முதல் புகைப்படத்தை பிரெஞ்ச் விஞ்ஞானி ஜோசப் நைஸ்ஃபோர் நீப்ஸ் (Nicéphore Niépce) 1826 ஆம் ஆண்டு எடுத்துள்ளார்.
அதற்கு View from the Window at Le Gras என்று தலைப்பிடப்பட்டது மற்றும் நீப்ஸின் வீட்டின் மேல்மாடி ஜன்னலில் இருந்து பார்க்கப்பட்ட ஒரு முற்றம் மற்றும் வெளிப்புறக் கட்டிடங்களின் காட்சியை இந்த புகைப்படம் காட்டுகின்றது. Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
எனவே எமது ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் முதன்முதலாக எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவித்து பகிரப்பட்ட புகைப்படமானது தவறானது என்பதுடன், அது 1972 ஆம் ஆண்டு வியட்நாம் போரின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:உலகில் முதன்முதலில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?
Fact Check By: suji shabeedharanResult: Misleading
