
முதல் தடவையாக சுவிட்சர்லாந்தின் Edelweiss விமானம் இலங்கை வந்ததாக தெரிவிக்கப்பட்ட ஊடக அறிக்கைகளை எம்மால் காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சுவிட்சர்லாந்திலிருந்து முதல் தடவையாக இலங்கை வந்த Edelweiss விமானம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி 2025.10.28 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.
மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சுவிட்சர்லாந்தின் முன்னணி leisure விமான நிறுவனமும் , சுவிஸ் சர்வதேச விமான சேவையின் சகோதர நிறுவனமுமான Edelweiss விமான சேவை, 2011 முதல் மாலே வழியாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்களை இயக்கி வருகிறது .

lankaaviator.com | Archived Link
அத்துடன், குறித்த விமான நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விமான சேவையை ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்து 2017 ஆம் ஆண்டில் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

flyedelweiss.com | Archived Link
அதேபோன்று, உள்நாட்டு ஊடக அறிக்கைகள் மற்றும் பிற இணையதள கட்டுரைகளில், 2018 ஆம் ஆண்டு நவம்பர் 03 ஆம் திகதி முதல், சூரிச் மற்றும் கொழும்பு இடையே ஈடெல்வைஸ் ஏர்லைன்ஸின் பருவகால விமான போக்குவரத்து நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தன. சூரிச் மற்றும் கொழும்பு இடையே இரு நகரங்களையும் நேரடியாக இணைக்கும் வகையில் ஈடெல்வைஸ் ஏர்பஸ் A340-300 விமானம் வாரத்திற்கு இரண்டு முறை போக்குவரத்தை மேற்கொள்ளும் எனவும், இதன்மூலம் சுவிஸ் மற்றும் பிற ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு எளிதாகவும் போக்குவரத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அந்த ஊடக அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. Link | Link| Link| Link
மேலும் சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் நேரடி விமானம் குறித்த இலங்கை மற்றும் மாலைத்தீவில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதியன்று பதிவொன்று வெளியிடப்பட்டிருந்தது.
2019/2020 குளிர்காலத்தில் சூரிச்சிலிருந்து கொழும்புக்கு ஈடெல்வைஸ் விமான அட்டவணையில், வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மூன்று விமான போக்குவரத்துகள் அதிகரிக்கப்படும் என அந்த ஆண்டில் குறித்த நிறுவனத்தினால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.
இருப்பினும், கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு 2021 முதல் சூரிச்சிலிருந்து கொழும்பிற்கான விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டதாக நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஊடக அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. Link | Link | Link | Link | Link
2021 ஆம் ஆண்டு மீண்டும் சூரிச்சிலிருந்து கொழும்பிற்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட எடெல்வைஸ் விமான சேவை குறித்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் பின்வருமாறு அறிக்கையிட்டிருந்தது.
2022 , 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான சூரிச் மற்றும் கொழும்பு இடையேயான எடெல்வைஸ் விமானங்கள் குறித்த குறிப்புகள் இங்கே Link | Link | Link
2025 ஆம் ஆண்டு குளிர்காலம் ஆரம்பமானதுடன் லுஃப்தான்சா விமான நிறுவன குழுமத்திற்கு சொந்தமான சுவிட்சர்லாந்தின் ஈடெல்வைஸ் விமான சேவை , அக்டோபர் 28 ஆம் திகதி சூரிச் மற்றும் கொழும்பு இடையே விமான சேவைகளைத் தொடங்கியது . ஏர்பஸ் A340-300 விமானம் ( WK64) கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது, இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தால் நீர் வணக்கத்துடன் குறித்த விமானம் வரவேற்கப்பட்டது, மேலும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்று Aviation Voice பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Archived Link
இலங்கை மற்றும் மாலைத்தீவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் இது குறித்து இவ்வாறு பதிவிட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் அதன் பேஸ்புக் பக்கத்தில் பின்வருமாறு ஒரு பதிவை வெளியிட்டிருந்தது.
இருப்பினும், சூரிச்சிலிருந்து கொழும்பிற்கும், கொழும்பிலிருந்து மாலைத்தீவிற்கும், மீண்டும் சூரிச்சிற்கும் செல்லும் முக்கோணப் பாதைக்குப் பதிலாக , 2025 அக்டோபர் 26 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எடெல்வைஸ் ஏர்பஸ் சூரிச்சிலிருந்து கொழும்பிற்கும், கொழும்பிலிருந்து சூரிச்சிற்கும் நேரடி விமானங்களை இயக்கும் என்று கூறப்பட்டது . Link | Link
அதேபோன்று சுவிட்சர்லாந்தின் விமான நிறுவனமான Edelweiss இன் உள்நாட்டு பிரதிநிதியான United Ventures இடம் நாம் இது குறித்து வினவியபோது, எடெல்வைஸ் ஏர்பஸ் சூரிச்சிலிருந்து கொழும்பிற்கும் கொழும்பிலிருந்து சூரிச்சிற்கும் நேரடி விமானங்களை இந்த ஆண்டு முதலே ஆரம்பித்ததாகவும் எங்களிடம் உறுதிப்படுத்தியது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்
இது தொடர்பாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடகப் பிரிவிடம் நாம் வினவினோம் , மேற்கூறிய பிரதான ஊடக அறிக்கைகள் தவறானவை என்றும், வரலாற்றில் முதல் முறையாக இந்த விமானம் இலங்கைக்கு வரவில்லை எனவும், நீண்ட காலமாக, ஈடெல்வைஸ் ஏர்பஸ் சுவிட்சர்லாந்தின் சூரிச் மற்றும் கொழும்பு இடையே நேரடி குளிர்கால விமானத்தை இயக்கி வருவதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில், Edelweiss விமான சேவை வரலாற்றில் முதல் முறையாக சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து இலங்கைக்கு விமான போக்குவரத்தை ஆரம்பித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் ஊடகச் செய்திகள் தவறானவை என்பதுடன் . ஈடெல்வைஸ் ஏர்பஸ் நீண்ட காலமாக குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தின் சூரிச் மற்றும் கொழும்பு இடையே விமான போக்குவரத்தை மேற்கொண்டு வருகின்றமை கண்டறியப்பட்டது.
ஈடெல்வைஸ் ஊடக அறிக்கைகள், செய்தி அறிக்கைகள் மற்றும் அந்த சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடகப் பிரிவும் அதனை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:சுவிட்சர்லாந்தின் Edelweiss விமானம் இலங்கைக்கு வந்த முதல் சந்தர்ப்பம் இதுவா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


