பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்தை அறிந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம்!

Insight இலங்கை | Sri Lanka

பல தசாப்தங்களாக, உலகின் ஒவ்வொரு மூலையிலும் பிளாஸ்டிக் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அப்படியானால், நாம் குடிக்கும் தண்ணீர், உண்ணும் உணவு மூலமாக நம் உடலை அது பாதிக்காது என்று எவ்வாறு கூற முடியும்? பிளாஸ்டிக் பாவனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அது இன்னும் தீர்க்கக்கூடிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாகும் என்றும், அதற்கு தெளிவான தீர்வுகள் மிகக் குறைவு என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2025 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் “பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்” என்பதில் கவனம் செலுத்துகிறது. அத்துடன் இந்த ஆண்டு, உலகளாவிய கொண்டாட்டங்களை கொரிய குடியரசு நடத்துகிறது.

ஐ.நா. அமைப்பின் முன்னணி சுற்றுச்சூழல் அமைப்பான ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைமையில், இந்த ஆண்டு  #BeatPlasticPollution என்ற தலைப்பில்  பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தோற்கடிக்க, தீர்வுகளைச் செயல்படுத்தல், அதற்காக வாதிட, உலகெங்கிலும் உள்ள மக்களை அணிதிரட்டுகிறது. 

இந்த ஆண்டு, உலக சுற்றுச்சூழல் தினம் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தாக்கங்கள் குறித்த வளர்ந்து வரும் அறிவியல் ஆதாரங்களை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் பிளாஸ்டிக்கின் 5 கொள்கைகளான நிராகரித்தல், குறைத்தல், மறுபயன்பாடு, மீள்சுழற்சி செய்தல் மற்றும் மறுபரிசீலனை செய்தல் என்பவற்றில் கவனம் செலுத்துகிறது.

உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாடு ஒப்பந்தத்தின் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு 2022 உலகளாவிய ஒப்பந்தத்திற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் இது உதவுகிறது.

உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் 11 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளில் வெளியேற்றப்படுகின்றன, மேலும் விவசாயப் பொருட்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் கழிவுகள் மற்றும் நிலப்பரப்புகளில் இருந்து மைக்ரோபிளாஸ்டிக் மண்ணில் சேர்கிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டின் வருடாந்த சமூக மற்றும் சுற்றுச்சூழல் செலவுகள் 300 பில்லியன் அமெரிக்க மொலர்கள்  முதல் 600 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மதிப்பிடப்பட்டுள்ளது .

கடல் சூழல் உட்பட பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய ஒப்பந்தத்தைப் பெறுவதில் நாடுகள் முன்னேற்றம் அடைவதை நோக்காக கொண்டு, இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் வருகின்றது. 2024 நவம்பர் மாதம், கொரிய குடியரசு பிளாஸ்டிக் மாசு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான ஐந்தாவது பேச்சுவார்த்தை அமர்வை நடத்தியது. இந்த அமர்வின் இரண்டாம் பகுதி ஆகஸ்ட் 5 முதல் 14 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

முன்னெடுத்துச் செல்லும் நாடு

கொரிய குடியரசு உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான உலகளாவிய அனுசரிப்புகளை இரண்டாவது முறையாக வழங்குகிறது. முதன்முதலில் 1997 இல் “For Life on Earth”  (பூமியில் வாழ்க்கைக்காக) என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது.

கடந்த 28 ஆண்டுகளில், கொரியா நீர் மற்றும் காற்றின் தரத்தை மேம்படுத்துதல், இரசாயனங்களைப் பாதுகாப்பாக நிர்வகித்தல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 

இன்று , உற்பத்தியாளர்களை பொறுப்பின் மூலம் வணிகத் துறையில் ஈடுபடுத்துவதில் பல தசாப்த கால அனுபவத்தை உருவாக்கி, கொரிய குடியரசு பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. 

பிளாஸ்டிக்கிற்கான உத்தி, உற்பத்தி மற்றும் வடிவமைப்பு முதல் நுகர்வு , மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி வரை பிளாஸ்டிக் வாழ்க்கைச் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கழிவுகளைக் குறைப்பதன் மூலமும், மறுசுழற்சி முயற்சிகளை விரிவுபடுத்துவதன் மூலமும், வட்டப் பொருளாதாரத்திற்கு மாறுவதை துரிதப்படுத்துவதன் மூலமும், கொரிய குடியரசு பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதற்கும், நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் தீர்க்கமான நடவடிக்கை எடுத்து வருகிறது. link 

இலங்கையில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 250,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. தனி நபரினால் ஆண்டுக்கு சுமார் 11 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்படுகிறது, அதில் 11 % மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. சட்டத்தால் தடைசெய்யப்பட்ட போதிலும், உணவுப் பொதித் தாள்கள், குழாய்கள் போன்ற பொருட்கள் இன்னும் கடைகளில் காணப்படுகின்றன.

நாட்டில் சட்டங்கள் இருந்தாலும், அவற்றை செயல்படுத்துவதில் குறைபாடுகள் இருப்பதாகவும், பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதற்கான அடிப்படை தீர்வாக பிளாஸ்டிக்கிற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றீடுகளை பயன்படுத்துவது சிறந்தது என Zero Plastic Movement இன் நிறுவனர் நிசங்க டி சில்வா சுட்டிக்காட்டினார்.

நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் குறியீடுகள் பற்றி நீங்கள் அறிவீர்களா?

நாம் அனைவரும் போத்தல்கள், கொள்கலன்கள், பைகள் என பல்வேறு வடிவங்களில் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம். பல பிளாஸ்டிக் பொருட்களில் பலரும் கண்டுகொள்ளாத ஒரு சிறிய முக்கோணம் உள்ளது, அதனுள் ஒரு எண் உள்ளது. அந்த எண் நீங்கள் எந்த வகையான பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறீர்கள், அது பாதுகாப்பானதா அல்லது மறுசுழற்சி செய்யக்கூடியதா என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்.

இந்த சின்னங்கள் ரெசின் அடையாள குறியீடுகள் (RIC– Resin Identification Codes) என்று அழைக்கப்படுகின்றன. அவை # 1 முதல் # 7 வரை இருக்கும். ஒவ்வொரு அடையாளமும் எதைக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

குறியீடு தயாரிப்புகள்மீள்சுழற்சி செய்யக்கூடியதா?பாதுகாப்பானதா?
#1 – PET அல்லது PETEதண்ணீர் மற்றும் குளிர்பான போத்தல்கள்(√) ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் ரசாயனங்கள் வெளியிடப்படலாம்.
#2 – HDPEபிளாஸ்டிக் குடங்கள் , ஷாம்பு போத்தல்கள்(√)வலுவான மற்றும் பாதுகாப்பானது
#3 – PVCகுழாய்கள் , cling wraps , விளையாட்டு பொருட்கள்(X)தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன
#4 – LDPEமளிகைப் பைகள் , பாண் பைகள்(√)நெகிழ்வானது ஆனால் எப்போதும் மறுசுழற்சி செய்யக்கூடியது அல்ல
#5 – PPயோகட் கப் , மருந்து போத்தல்கள்(√)வலுவானது , வெப்ப எதிர்ப்பு
#6 – PS (Polystyrene)பிளாஸ்டிக் கப் , உணவுப் பொதிப் பெட்டிகள்(X)நச்சு இரசாயனங்கள் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு
#7 – Otherகலப்பு பிளாஸ்டிக் (குழந்தை பாட்டில்கள் , சன்கிளாஸ்கள்)தயாரிப்பைப் பொறுத்ததுபெரும்பாலும் மீள்சுழற்சி செய்யப்படுவதில்லை

மூலம் – American Chemistry Council. Plastic Packaging Resins.,The Balance: Small Business.Recycling Polyethylene Terephthalate (PET).,Enkay ,plasticactioncentre

இந்தக் குறியீடுகள் இலங்கைக்குப் பொருத்தமானவையா ?

இலங்கையில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் தண்ணீர் போத்தல்கள், உணவுக் கொள்கலன்கள், வாளிகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் பொதுவாக #1 முதல் #7 வரையிலான குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன . இந்த குறியீடுகள் சர்வதேச பிளாஸ்டிக் வகைப்பாடு தரநிலைகளின்படி அமெரிக்காவின் பிளாஸ்டிக் தொழில் சங்கத்தால் (SPI) உருவாக்கப்பட்டுள்ளன. அவை இலங்கை உட்பட உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

சில திட்டங்கள் PET (#1) மற்றும் HDPE (#2) பிளாஸ்டிக்குகளை சேகரித்து மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கின்றன. PVC (#3) மற்றும் PS (#6) போன்ற பொருட்கள் அவற்றின் அபாயகரமான தன்மை காரணமாக தொழில்துறை அழிவுக்கு அனுப்பப்படுகின்றன. இது குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

இலங்கையின் பிளாஸ்டிக் பொருள் முகாமைத்துவ கொள்கைகளும் இந்தக் குறியீடுகளை ஏற்றுக்கொள்கின்றன.

2021 முதல் 2030 வரை செயல்படுத்தப்படும் தேசிய பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ செயல் திட்டம் (National Action Plan), மக்கள் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வகைகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த ஊக்குவிக்கிறது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இந்த பிளாஸ்டிக் குறயீடுகளை எவ்வாறு பயன்படுத்தி தங்கள் கழிவுகளை வரிசைப்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளிக்கும் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வகைகளையும், அவற்றின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்குகளையும் நீங்கள் அறிந்து கொண்டால் மாத்திரமே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள்.

இலங்கையில், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1.6 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுவதாகவும், அதில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே உண்மையில் மறுசுழற்சி செய்யப்படுவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சுற்றுச்சூழலில் வெளியிடப்படுகின்றள, ஆறுகள், ஓடைகள் அல்லது கடல்களில் மிதக்கின்றன அல்லது எரிக்கப்படுகின்றன என்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

மனிதர்கள் உட்கொள்ளும் குடிநீரிலும், உணவாக உட்கொள்ளும் மீன்களிலும் மைக்ரோபிளாஸ்டிக் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன .

பல பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் ஜீரணமாகும் வகையில் தயாரிக்கப்படுகின்றன, ஆனால் உண்மையில் அவை மிகச் சிறிய துகள்களாக உடைந்து முழுமையான உயிரியல் சிதைவுக்கு உட்படுவதில்லை (Biological degradation)

எனவே, பகுதியளவு மக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் (non degradable), மக்காத மொத்த பிளாஸ்டிக் பொருட்களை(Partially degradable) விட சுற்றுச்சூழலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும்.

மண்ணில் தங்கியிருக்கும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள், நீரோடைகள் மற்றும் ஆறுகளில் இருந்து கடலுக்கு நீரோட்டங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இறுதியாக, கடல் நீர் மற்றும் ஆறுகளில் உள்ள சிறிய பிளாஸ்டிக் துகள்கள், நீரில் உள்ள நுண்ணுயிரிகளால் (zooplankton, ichthyoplankton) வடிகட்டி உணவின் மூலம் உடலுக்குள் நுழைகின்றன.

இந்த நுண்ணுயிரிகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் துகள்களை மிகச் சிறிய உணவுத் துகள்களாகத் தவறாகப் புரிந்துகொண்டு அவற்றை உட்கொள்ளும் அபாயம் உள்ளது.

சிறிய பிளாஸ்டிக் துகள்களைக் கொண்ட நுண்ணுயிரிகளை சிறிய மீன்கள் (fish larvae) சாப்பிட்டு, பின்னர் மீன்கள் அவற்றை உட்கொள்கின்றன. இதனால், இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள் உணவுச் சங்கிலியில் நுழைந்து இறுதியில் மனித உடலுக்குள் நுழைகின்றன.

நாம் அடிக்கடி உண்ணும் உப்பு மற்றும் பிற கடல் பொருட்களில் கூட இந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல்கள் அறிவதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள் 

இது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு உடல்நலம் மற்றும் பொருளாதார தாக்கங்களையும் ஏற்படுத்தும். உலக சுற்றுச்சூழல் தினத்தன்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, இன்று நாம் என்ன பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம், அவை ஏற்படுத்தும் தீங்குகளைப் புரிந்துகொண்டு, மனிதர்கள் மற்றும் விலங்குகள் என அனைத்து உயிரினங்களின் நல்வாழ்விற்காகவும் பாடுபடுவோம்!

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Avatar

Title:பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்தை அறிந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம்!

Fact Check By: suji shabeedharan 

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *