கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான சொகுசு பஸ்ஸில் மரக்குற்றிகள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் கொழும்பு -யாழ்ப்பாணம் ஏசி பஸ்ஸில் கடத்தபட்ட அறுத்த மரதுண்டுகள் என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படங்கள் நேற்று (2025.07.21) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அது குறித்த ஆய்வின் போது குறித்த பதிவின் தலைப்பிற்கு அருகில் மேலும் செய்திகளுக்கு என தெரிவிக்கப்பட்டு ஒரு இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. எனவே நாம் அந்த இணைப்பிற்குள் சென்று பாரக்கும் போது அது Lanka4 என்ற இணையதளத்தை காட்டியது.
எனவே அந்த இணையதளத்தில் மரக்குற்றிகள் கடத்தல் தொடர்பில் எந்தவித செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
தொடர்ந்து நாம் கொழும்பு – யாழ்ப்பாணம் சொகுசு பஸ்களில் மரக்குற்றிகள் கடத்தப்பட்டமை தொடர்பான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லலை.
ஆகவே குறித்த சமூக ஊடகப்பதிவில் இருந்த புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய வேலையில் இது கடந்த 2016 ஆம் ஆண்டு மரக்குற்றிகள் கடத்தப்பட்ட சம்பத்தின் போது எடுப்பட்ட குறித்த புகைப்படங்கள் நீர்வை ஊரவன் என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.
அதனடிப்படையில் மேலும் ஆராய்ந்த போது அக்காலக்கட்டத்தில் இது குறித்த செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Link | Link
யாழ். பிராந்திய ஊடகவியலாளர்கள்
நாம் இது குறித்து யாழ். பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலரை தொடர்புகொண்டு வினவியபோது குறித்த புகைப்படங்கள் 2016 ஆம் அதிசொகுசு பஸ்ஸில் முதிரை மரக்குற்றிகள் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் இவ்வாறு சொகுசு பஸ்களில் மரக்குற்றிகள் கடத்தப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
யாழ்.பொலிஸ் நிலையம்
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டு நாம் வினவியபோது, பஸ்களில் பல்வேறு கடத்தல் சம்பவங்கள் பதிவாகி வருகின்ற போதிலும் அவை தொடர்பில் இன்னும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களானது அண்மையில் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையது அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அதேபோன்று பஸ்ஸில் மரக்குற்றிகள் கடத்தப்பட்ட சம்பவங்கள் அண்மையில் பதிவாகவில்லை என்பதுடன் இது 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
2016 ஆம் ஆண்டு அதிசொகுசு பஸ்ஸில் கடப்பட்ட முதிரைமரக் குற்றிகள்
முல்லைத்தீவு, துணுக்காய் சிறாட்டிக் குளம் பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் – கொழும்பு சொகுசு பஸ் ஒன்றில் கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகளை, வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் 2016.04.04 ஆம் திகதி கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, பஸ் சாரதி கைது செய்யப்பட்ட அதேவேளை, வாகன உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் தப்பித்துச் சென்றுள்ளனர்.
கைப்பற்றப்பற்ற மரக்குற்றிகள் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்தனர்.
சொகுசு பஸ்ஸின் பயணிகள் இருக்கைகள் அனைத்தும் கழற்றப்பட்டு, அதற்குள் முதிரை மரக்குற்றிகள் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok | YouTube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கொழும்பு – யாழ்ப்பாணம் சொகுசு பஸ்ஸில் மரக்குற்றிகள் கடத்தப்பட்டதாக தற்போது பகிரப்படும் புகைப்படங்கள் 2016 ஆம் ஆண்டு கொழும்பு – யாழ் இடையிலான சொகுசு பஸ்ஸில் முதிரை மரக்குற்றிகள் கடத்தப்பட்ட சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள்மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:சொகுசு பஸ்ஸில் மரக்குற்றிகள் கடத்தப்பட்டதாக பகிரப்படும் புகைப்படங்களின் உண்மை என்ன?
Fact Check By: Suji ShabeedharanResult: Misleading
