ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு சிலர் தப்பி சென்றதாக பரவும் தகவல் உண்மையா..?

அரசியல்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சில வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் நாட்டை விட்டு தப்பி சென்றதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):


Facebook Link
 | Archived Link

சமூக வலைத்தளங்களில் “அமெரிக்காவுக்கு பசில், பூட்டானுக்கு கோதா, ஜப்பானுக்கு இராஜ், கொரியாவுக்கு உமாண்தா.

3% வீழ்ந்தாலும் அனுர ஒழிய வில்லை, விட்டு ஓடவும் இல்லை சரியான தலைவனை கொண்டு வருவோம்..! வெற்றி 100%” இம் மாதம் 20 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (20.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியினை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் இன்று (24.09.2024) இடம்பெறவுள்ள நிலையில், சில ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த சிலர் நாட்டை விட்டு வெளியேறியதாக சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

அதற்கமைய நாமல் ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்த இராஜ் நாட்டை விட்டு வெளியேறியதாக பரவும் தகவலுக்கு, அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு கருத்தினை தெரிவித்திருந்தார்.

ஐப்பானில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக தாங்கள் பயணிப்பதாக நாமல் ராஜபக்ஷவுடன் கதைத்த வீடியோ பதிவினை அவர் பதிவேற்றம் செய்திருந்தார்.

நாமல் மனைவி நாட்டை விட்டு தப்பி சென்றாரா..?

குறித்த காணொளியில் நாமலுடன் அவரின் மனைவி லிமினி இருப்பதோடு, இருவரும் கதிர்காமம் சென்று வீடு திரும்புவதாக நாமல் இராஜிற்கு தெரிவித்தார்.

<iframe frameBorder=’0′ width=’640′ height=’360′ webkitallowfullscreen mozallowfullscreen allowfullscreen src=”https://www.awesomescreenshot.com/embed?id=31746413&shareKey=fe1b482a25ef86f85f460152341e9db2″></iframe>


Facebook Link 

பாத்தியா மற்றும் சந்தோஷ் நாட்டை விட்டு தப்பி சென்றாரா..?

ஐராஜ் உள்ளிட்ட மற்ற பாடகர்கள் தொடர்பாக நாம் பரிசோதித்ததில், அவர்கள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (22.09.2024) ஜப்பானில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பு செய்யும் குழுவினர் பேஸ்புக் பக்கத்தில் ஜப்பானில் நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சி செப்டம்பர் 22 ஆம் திகதி நடைபெறும் என ஏப்ரல் 12 ஆம் திகதி பதிவிட்டிருந்தது.

Facebook | Archived Link

மேலும், இதே பேஸ்புக் பக்கத்தில், கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி வரை, இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் மேற்குறிப்பிட்ட கலைஞர்கள் மற்றும் பிற கலைஞர்களின் பெயர்களைக் காட்டும் மற்றொரு பதிவு காணக்கிடைத்தது.

Facebook | Archived Link

ஸ்ரீ சமந்தபத்ர தேரர் ( உமந்தாவ ) நாட்டை விட்டு தப்பி சென்றாரா..?

நாம் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது, கொரிய பேரிடர் மேலாண்மைப் பிரிவின் தலைவரான திரு. சோ சன் லீயின் அழைப்பின் பேரில் ஸ்ரீ சமந்தபத்ர தேரர் கடந்த 18 ஆம் திகதி கொரியாவின் சியோலுக்கு விஜயம் செய்துள்ளமை காணக்கிடைத்தது.

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fashramaya%2Fposts%2Fpfbid0dJLz1jDNmka11D12FRAjeggfrsLdTS39Lj7WHiMXcRx5sGPzBVvZNnpoSDxqk6Gkl&show_text=true&width=500″ width=”500″ height=”250″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

மேலும் இன்று (21.09.2024) அவரின் உபதேச நிகழ்வொன்று ஐப்பானில் இடம்பெறவுள்ளதாக அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் கடந்த 14 ஆம் திகதி பதிவிட்டிருந்த பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fumandawa%2Fposts%2Fpfbid02ay9BCNK8BPjTKmuVRcaCe7Y6nYNKMEENgrYuJdsCZUM5no1zWKmdYtay5kAu1ripl&show_text=true&width=500″ width=”500″ height=”667″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு சிலர் தப்பி சென்றதாக என பரவும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *