இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட விமானங்களை ஓட்ட மறுத்த இரு அமெரிக்க இராணுவ விமானிகள் கைதா..?

Misleading சர்வதேசம் | International


INTRO :

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட விமானங்களை ஓட்ட மறுத்த இரு அமெரிக்க இராணுவ விமானிகள் கைது என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின்விவரம் (What is the claim):

 Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில்“ “இஸ்ரேலுக்கு” ஆயுதங்கள் நிரப்பப்பட்ட விமானங்களை ஓட்ட மறுத்த இரண்டு அமெரிக்க இராணுவ விமானிகள் கைது செய்யப்பட்டனர்.

அவருடைய கருத்தை தைரியமாக சொல்ல வந்த ராணுவ வீரர்களுக்கு தண்டனை. “என இம் மாதம் 19 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  (19.09.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

சமூகவலைத்தளத்தில் பகிரப்படுவதை போன்று குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பாக செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி இருக்கும் அது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டபோது அவ்வாறு சம்பவம் இடம்பெற்றாதக எமக்கு செய்திகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

ஆகவே குறித்த காணொளியின் சில காட்சிகளை நாம் புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதன்போது, காசா மீதான இஸ்ரேலின் போருக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதைக் கண்டித்து செனட் சபையில் முழக்கமிட்ட அமெரிக்க இராணுவ வீரர்களான அந்தோணி அகுய்லர் மற்றும் ஜோசபின் கில்பியூ. இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக Al Jazeera English எக்ஸ் பக்கத்தில் கடந்த 4 ஆம் திகதி (04.09.2025) வெளியிட்டிருந்த காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தமையும் எமது ஆய்வின் போது காணக்கிடைத்தது. trtworld.com 

குறித்த காணொளி தொடர்பாக சர்வதேச உண்மை கண்டறியும் நிறுவனங்களும் ஆய்வினை மேற்கொண்டிருந்தமை காணக்கிடைத்தது.thequintmisbar

காஸா – இஸ்ரேல் யுத்தம்

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் காஸா மீது இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும், இது  இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்வதாக ஐநா ஆணையம் தெரிவித்துள்ளது. BBC Tamil | BBC English

காஸா தனி நாடு

பாலஸ்தீனத்தை தனிநாடாக 140க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன.இருப்பினும் இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.

இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் அறிவித்துள்ளன. அதேவேளை, இந்த 3 நாடுகளின் அறிவிப்பிற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Dailythanthi | dinamalar | nbcnews

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட விமானங்களை ஓட்ட மறுத்த இரு அமெரிக்க இராணுவ விமானிகள் கைது என பகிரப்படும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட விமானங்களை ஓட்ட மறுத்த இரு அமெரிக்க இராணுவ விமானிகள் கைதா..?

Fact Check By: S.G.Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *