ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் அதன் ஊழியர்களினால் துறத்தப்பட்டாரா?

Misleading இலங்கை | Sri Lanka

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு, அதன் ஊழியர்கள்  எதிரப்பு தெரிவித்து விரட்டியடிப்பதாக, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது.

எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link 

குறித்த பதிவில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர்..

ஊழியர்களின் கூக்குரலை கேட்டபடி “திக்குத்திசை” தெரியாமல் ஓடும் காட்சி.. என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.21 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த காணொளியை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் ஊழியர்களினால் அதன் தலைவர் விரட்டியடிக்கப்படுவதாக தெரிவித்தே இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது. எனவே பலரும் இவ்வாறு ஊழியர்களினால் விரட்டப்படுவது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கிஹான் டி சில்வா என்றே ஊகித்திருந்தனர்.

இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தகவல் தொடர்பு அதிகாரி

எனவே இதன் உண்மை தன்மையை அறிவதற்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தகவல் தொடர்பு அதிகாரி பணிப்பாளர் (Channel Eye) சஞ்சய இந்திரகுமாரவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.

இதன்போது, சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கிஹான் டி சில்வாவுக்கு அதன் ஊழியர்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் காணொளி அல்ல எனவும், மாறாக கூட்டுத்தாபனத்தின் பிரதி பணிப்பாளர் நாயகமாக (நிர்வாகம்) பணியாற்றும் பெண் அதிகாரிக்கு ஊழியர்கள் தெரிவித்த எதிர்ப்பை காட்டும் காணொளியே அது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிர்வாக பணிகள் தொடர்பில் குறித்த அதிகாரிக்கும் ஊழியர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் நிலையை தொடர்ந்தே ஊழியர்கள் அந்த அதிகாரிக்கு தமது எதிர்ப்பை வெளிப்படித்தியதாகவும் சஞ்சய இந்திரகுமார தெரிவித்தார்.

வெகுஜன ஊடக அமைச்சு

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக்க விஜயமுனி அவர்களி ஊடகச் செயலாளரை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.

இந்த சம்பவத்தின் போது ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் அதன் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், கடந்த பெப்ரவரி மாதம் பிரதி பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) பதவிக்கு நியமிக்கப்பட்ட பணிப்பாளருக்கே இதன்போது ஊழியர்கள் எதிர்ப்பை மேற்கொண்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

நிர்வாகத்தில் காணப்படும் சிக்கல் மற்றும் ஊழியர்களை அணுகும் விதம் போன்றவற்றில் காணப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களினால் தெரிவிக்ப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதே நேரம் குறித்த காணொளியில் காட்டப்பட்டுள்ளதன் படி வாகனத்திற்குள் ஏறும் நபர் யார் என்பது தொடர்பிலும் நாம் அவரிடம் வினவினோம், இதன்போது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பாதுகாப்பிற்காக அவருடன் அந்த வாகனத்தில் ஏறிச் சென்றதாக ஊடகச் செயலாளர் குறிப்பிட்டார்.

ஊடக அறிக்கையிடல்கள்

இருப்பினும், சில ஊடகங்களில் இந்த எதிர்ப்பானது, பணிப்பாளர் நாயகம், பிரதி பணிப்பாளர் நாயகம் இருவரையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்ற அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

Archived Link

மேலும் தமிழ்வின் இணையதளத்தில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) பணிப்பாளர் நாயகம் மனோஜ் நடேஷன அமரசிங்க மற்றும் துணை பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) தனுஜா அரியரத்ன ஆகியோர் ஊழியர்களால் தாக்கப்பட்ட பின்னர் அலுவலக வளாகத்திலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும் தொலைக்காட்சி நிலையத்தின் உள் வட்டார தகவல்களின்படி, இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுவனத்தின் ஊழியர்களுடன் கொண்டிருந்த பல மோதல்களின் விளைவாக நிகழ்ந்துள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

மேலும் நாம் இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவுடன் தொடர்புகொண்டு வினவியபோது, கூட்டுத்தாபனத்தில் பிரதி பணிப்பாளர் நாயகமாகமாக (நிர்வாகம்) பணியாற்றும் அதிகாரிக்கும் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அதிருப்தியே இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற இந்தப் எதிர்ப்பிற்கு, காரணம் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த சப்பவத்திற்கு சுகாதார மற்றும் ஊடகத் பிரதி அமைச்சரின் தலையீட்டில், இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்குவதற்கான ஒப்பந்தத்துடன் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் கூட்டுத்தாபன வளாகத்தில் ஊழியர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு தற்போதைய தலைவருக்கு எதிராக நடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது எனவும், எதிர்காலத்தில் இந்த சம்பவம் குறித்து அமைச்சருடன் மேலும் விவாதிக்க ஊழியர்கள் இப்போது ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கை ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பல ஊழியர்களிடம் இது குறித்து வினவியபோது, ரூபவாஹினி தலைவருக்கு அதன் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், மாறாக அதன் நிர்வாக பிரதி பணிப்பாளர் ஒருவருக்கே இந்த எதிர்ப்பு தெரிவிக்ப்பட்டது எனவும் அவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும் இதன்போது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

எனவே எமது ஆய்வுகளின் அடிப்படையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அதன் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரை விரட்டியடிப்பதாக  பகிரப்படும் காணொளியானது தவறானது என்பதுடன் அந்த காணொளியானது  ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் அதன் நிர்வாக பிரதிப் பணிப்பாளருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும்  கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் அதன் ஊழியர்களினால் துறத்தப்பட்டாரா?

Fact Check By: suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *