மெலிஸா புயல் ஜமைக்காவை தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளியா இது?

Misleading சர்வதேசம் | International

மெலிஸா புயல் ஜமைக்காவை தாக்கிய போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

ஜமைக்கா நாட்டில் உருவாகிய மெலினா புயலின் தாக்கத்தால் 300 கிமீ வேகத்தில் காற்றும் 70 செமீ அளவுக்கு கனமழையும் கொட்டித்தீர்த்துக்கொண்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்புள்ளாகியுள்ளார்கள், பலலட்சம் மதிப்பிலான பொருட்கள் கடும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது..

பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்.  என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி 2025.10.29 ஆம் தழகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பலரும் இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த காணொளியை நாம் நன்கு அவதானித்த போது அதில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு அந்த காணொளியானது உருவாக்கப்பட்டுள்ளமையை அறிய முடிந்தது.

எனவே நாம் அதில் இருந்த  வெவ்வேறு காணொளிகளின் காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.

இதன்போது குறித்த காணொளியில் முதலாவதாக இணைக்கப்பட்டிருந்த காணொளியில்  வெள்ள நீரில் வாகனங்கள் அடித்துச் செல்வதனை காணமுடிந்தது. ஆகவே அது தொடர்பில் நாம் ஆய்வு செய்த போது குறித்த காணொளி கடந்த அக்டோபர் 4 ஆம் திகதி பல்கேரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டுள்ளமையை அறியமுடிந்தது.

BBC இணையதளத்தில் குறித்த காணொளி  வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

அதில் இரண்டாவது காணொளி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது கடந்த 2025.10.21 ஆம் திகதி குறித்த காணொளியானது பேஸ்புக் பக்கமொன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

அந்த காணொளியில் எல் சல்வடோரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய அம்பியுலன்ஸின் சாரதி தப்பியோடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மெலிசா புயல் ஜமைக்காவில் அக்டோபர் 27 ஆம் திகதி இரவு மற்றும் 28ம் திகதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காணொளியானது சமூக ஊடகங்களில் 2025.10.21 ஆம் திகதியே பதிவிடப்பட்டிருந்தது. 

அடுத்த காணொளி தொடர்பில் ஆராய்ந்த போது அந்த காணொளியானது 2022.07.01 ஆம் திகதி இத்தாலியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

மேற்குறிப்பிட்ட காணொளியில் அடுத்ததாக காணப்பட்ட காணொளி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அது அக்டோபர் 14 ஆம் திகதி மெக்ஸிகோவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி என்பதனை அறியமுடிந்தது.

அது குறித்த La Tercera  இணையதளத்தில் வெளியான செய்தியில் குறித்த காணொளியின் புகைப்படம் இணைக்கப்பட்டு அது மெக்ஸிகோ வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட படம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த காணொளியில் அடுத்தாக இணைக்கப்பட்ட காணொளி தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டபோது அந்த காணொளியானது கடந்த அக்டோபர்  10 ஆம் திகதி YouTube பக்கமொன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது. 

அதில் கலிபோர்னியாவின் சன்டா அனா பகுதியில் பெய்த கடும் மழை காரணமான ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஜமைக்காவை தாக்கிய மெலிஸா புயல் என பகிரப்பட்ட காணொளியானது வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களின் போது எடுக்கப்பட்ட காணொளிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 


இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:மெலிஸா புயல் ஜமைக்காவை தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளியா இது?

Fact Check By: Suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *